Skip to main content

அடுத்தடுத்து குவியும் படங்கள்... புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விஜய் ஆண்டனி

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

vijay antony new movie tittle poster release date announced

 

விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அவர் 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', 'மழை பிடிக்காத மனிதன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி பாலாஜி முருகன் இயக்கும் 'கொலை' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்க, மீனாக்ஷி சவுத்ரி,  ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (21.1.2022) நிறைவடைந்துள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த பணிகளை முடித்து கோடை விடுமுறையில் 'கொலை' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்ததாக இயக்குநர் சி.எஸ் அமுதன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் நாளை (23.1.2022) மாலை 4 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் நாளை மாலை 4.15 மணிக்கு விஜய் ஆண்டனி இயக்குநர் சி.எஸ் அமுதன் உள்ளிட்ட பலர் ட்விட்டர் ஸ்பேசில் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

 

 

 

சார்ந்த செய்திகள்