Skip to main content

இயக்குநர் விக்னேஷ் சிவன் மத்திய அமைச்சருடன் சந்திப்பு

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

vignesh shivan met central minister anurag thakur

 

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்தும் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், தமிழில் இருந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படமும் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ‘ஸ்வீட் பிரியாணி’ குறும்படமும் திரையிடப்பட்டன. ‘கூழாங்கல்’ படத்தைப் பார்த்த ரசிகர்கள், படம் முடிந்ததும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.

 

ad

 

இந்நிலையில், ‘கூழாங்கல்’ படத்தைத் தயாரித்த விக்னேஷ் சிவன் மத்திய விளையாட்டு மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் ‘கூழாங்கல்’ படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

‘கூழாங்கல்’ திரைப்படமானது, இந்திய அரசு சார்பில் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் தொடர்ந்து விருதுகளை வென்றுவருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''ஹாப்பி தீபாவளி...''-இரட்டை குழந்தைகளுடன் வாழ்த்து சொன்ன விக்கி நயன்

Published on 24/10/2022 | Edited on 24/10/2022

 

"Happy Diwali..." - Vicky Nayan with twins

 

அண்மையில் திருமணமான நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்கள். இந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்திருக்கலாம் என தகவல் வெளியான நிலையில் அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சட்ட விதிமுறைகளை மீறி இருவரும் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தொடர்ந்து விமர்சனம் எழுந்து வந்தது.

 

இந்நிலையில் விக்கி- நயன் தாம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லும் வீடியோ ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் கையில் குழந்தைகளை தூக்கிக்கொண்டபடி நின்றுகொண்டு ''  அனைவருக்கும் ஹாப்பி தீபாவளி'' என  வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ந்தனர்.   

 

 

Next Story

கூழாங்கல் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசின் விருது கிடைத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது" - இயக்குநர் வினோத் ராஜ்

Published on 12/09/2022 | Edited on 12/09/2022

 

koozhangal director vinoth raj get puduchery state award

 

புதுச்சேரி அரசு மற்றும் நவதர்ஷன் திரைப்படக் கழகம், அலையன்ஸ் பிரான்சிஸ் ஆகியவைகள் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

 

அதன்படி இந்த ஆண்டிற்கான இந்திய திரைப்பட விழா - 2022 புதுச்சேரியில் கடந்த வெள்ளி அன்று தொடங்கியது. இதில் புதுச்சேரி அரசின் சார்பாக யுவன் சங்கர் ராஜா இசையில் 2021 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி விருது வழங்கும் விழா அலையன்ஸ் பிரான்சிஸ் கலையரங்கில்  நடைபெற்றது. 

 

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், புதுச்சேரி அரசால் தேர்வு செய்யப்பட்ட கூழாங்கல் திரைப்படத்திற்கான விருதையும், ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையையும் இயக்குநர் வினோத்ராஜிடம் வழங்கி கௌரவித்தார்.

 

koozhangal director vinoth raj get puduchery state award

 

இந்த நிகழ்ச்சியில் படத்தின் நடிகர்கள், மற்றும் துணை இயக்குநர்கள், துணை நடிகர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் வினோத்ராஜ், "நாடகத்திலிருந்து வந்த தனக்கு புதுச்சேரி அரசால் நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் விருது கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எடுத்த திரைப்படத்திற்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. திரைப்படங்கள் எப்போதுமே அனுபவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். இந்த விருதை பெற்றுக் கொண்டது மேலும் பல நல்ல திரைப்படங்களை எடுக்க உத்வேகமாக இருக்கும்" என்றார்.

 

இந்த திரைப்பட விழா வருகின்ற 13 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஐந்து நாட்களில் தமிழில் கூழாங்கல், தெலுங்கில் 'நாட்டியம்', மலையாளத்தில் 'சன்னி', வங்காளத்தில் 'கல்கொக்கோ', இந்தியில் 'ஆல்பா பீட்டா காமா' ஆகிய விருதுகள் பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.