Skip to main content

'வி மிஸ் யூ சார்' - வெங்கட் பிரபு மிஸ் செய்யும் அந்த இருவர்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Venkat Prabhu

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாநாடு படம் தொடங்கும்போதே வி மிஸ் யூ சார் என்று எஸ்.பி.பியின் புகைப்படமும் வாலியின் புகைப்படமும் காட்டப்பட்டன. எஸ்.பி.பி-யையும் வாலியையும் வெங்கட் பிரபு ஏன் மிஸ் செய்கிறார்?

 

பாரம்பரியமிக்க இசைக் குடும்பத்தில் இருந்து வந்த இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை 600028 படத்தின் மூலமாக திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். சிவா, ஜெய், பிரேம் ஜி என இளைஞர்கள் பட்டாளம் நிரம்பியிருந்த இப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றதோடு, வெங்கட் பிரபுவின் இயக்குநராக திரை வாழ்க்கை வலுவான என்ட்ரி அமைத்துக் கொடுத்தது. சென்னை 600028 படத்தை எஸ்.பி.பியின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக அவருடைய மகன் சரண் தயாரித்திருந்தார். வெங்கட் பிரபுவும் சரணும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். 90களின் மத்தியில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சரண் இணைந்து நெக்ஸ்ட் ஜெனரேஷன் என்று இசைக்குழுவும் நடத்தியுள்ளனர். அந்த வகையிலும், கங்கை அமரனின் மகன் என்ற வகையிலும் எஸ்.பி.பிக்கும் வெங்கட் பிரபு மிக நெருக்கம். அதேபோல கவிஞர் வாலியுடனும் வெங்கட் பிரபு நல்ல நெருக்கம் கொண்டிருந்தார். வெங்கட் பிரவுவின் ஆரம்பக்கால படங்கள் தொட்டு தான் இறக்கும்வரை வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களுக்கும் வாலி பாடல்கள் எழுதினார். சென்னை 600028 படத்தில் 'யாரோ யாருக்குள் யாரோ...' என்ற பாடலை வாலி எழுத, எஸ்.பி.பி. பாடியிருப்பார்.

 

ad

 

அதனைத் தொடர்ந்து, சரோஜா படத்தில் இடம்பெற்ற 'தோஸ்த் படா தோஸ்த்...', கோவா படத்தில் இடம்பெற்ற டைட்டில் ட்ராக், 'அடிடா நையாண்டி...', 'ஊரு நல்ல ஊரு...', ஆகிய பாடல்களை வாலி எழுதியிருந்தார். அதேபோல கோவா படத்தில் இடம்பெற்றிருந்த 'வாலிபா வா வா...' என்ற பாடலை இளையராஜாவுடன் இணைந்து எஸ்.பி.பி பாடியிருப்பார். மங்காத்தா படத்திலும் மச்சி ஓபன் தி பாட்டில் பாடல் உட்பட மூன்று பாடல்களை வாலி எழுதியிருந்தார். பிரியாணி படத்தில் இடம்பெற்ற 'மிசிஸ்ப்பி...', 'நானா நானா...' ஆகிய பாடல்களே வெங்கட் பிரபுவின் படத்திற்காக வாலி எழுதிய கடைசி பாடல்களாகும். பிரியாணி திரைப்படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே கவிஞர் வாலி காலமானார். 

 

அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 - 2, பார்ட்டி, மாநாடு ஆகிய படங்களில் பிற கவிஞர்களையே வெங்கட் பிரபு பயன்படுத்திவருகிறார். அவருடைய இன்றைய படங்களில் உள்ள பாடல்கள் வெற்றிபெற்றாலும்கூட வாலியையும் அவருடைய வரிகளையும் வெங்கட் பிரபு மிகவும் மிஸ் செய்கிறார்போல... சென்னை 600028, கோவா படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் படங்களில் எஸ்.பி.பி. பாடல்கள் பாடாவிட்டாலும்கூட தனக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர் என்கிற வகையிலும், தன்னுடைய தனிப்பட்ட நெருக்கம் காரணமாகவும் எஸ்.பி.பியை மிகவும் மிஸ் செய்கிறார்போல... அந்த வெளிப்பாடாகவே வி மிஸ் யூ சார் என்ற அந்த வரிகள் மாநாடு படத்தின் தொடக்கத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்ட நெரிசல் - சேதமடைந்த விஜய்யின் கார்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
vijay car damage in kerala the goat movie shoot

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்துவிடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” எனப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக இன்று விமானம் மூலம் கேரளாவிற்குச் சென்றார் விஜய். காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரை காண கேரள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். விஜய் வந்து இறங்கியதும் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார் விஜய். 

vijay car damage in kerala the goat movie shoot

அவர் வெளியில் செல்லும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்துள்ளனர். அதனால் கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. உள்ளே உட்கார்ந்திருந்த விஜய்யும் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்தார். ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

‘14 ஆண்டுகளுக்குப் பிறகு...’ - விஜய்க்காக குவிந்த ரசிகர்கள்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
vijay arrived in kerala for goat movie shoot

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்துவிடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” எனப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக இன்று விமானம் மூலம் கேரளாவிற்குச் சென்றார் விஜய். காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரை காண கேரள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். விஜய் வந்து இறங்கியதும் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார் விஜய். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.