Skip to main content

முன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

vdbczcz

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. 

 

மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். மேலும், சில பிரபலங்கள் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் செய்துவரும் நிலையில் நடிகர் வையாபுரி கரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வின்றி உழைத்துவரும் முன்களப் பணியாளர்களுக்கு உணவு வழங்கினார். இவர் உணவு வழங்கிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகளின் வாழ்வியலை சொல்லும்  ‘பரமன்’

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
paraman movie first look released

இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’. விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் 'ஜெய்பீம்', 'பரியேறும் பெருமாள்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக  நடித்திருக்கிறார்.

பழ கருப்பையா வில்லனாக நடிக்க, ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழுதியுள்ளார். பாடல்களை வேல்முருகன், முகேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஏ சந்திரசேகர், பி வாசு உள்ளிட்ட பலரும் இணைந்து வெளியிட்டு உள்ளனர். இயக்குநர் சீமான், இப்படத்தின் டிரைலரையும் பார்த்துவிட்டு, இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை சொல்ல வருகிறது எனக் கூறி தனது பாராட்டுகளைத்  தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

Next Story

துரை வையாபுரிக்கு பொறுப்பு, வைகோவுக்கு அதிகாரம் - மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

Resolution at the mdmk General Committee Meeting

 

மதிமுகவின் 28ஆவது பொதுக்குழுக் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் இன்று கூடியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தமிழக அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

 

மேலும், இன்றைய கூட்டத்தில் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கும் பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது. துரை வையாபுரிக்கு பொறுப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து மதிமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், இந்த ஒப்புதலானது வழங்கப்பட்டது.

 

அத்தோடு, கட்சிக்கு எதிராக பேசுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தையும் பொதுக்குழு வைகோவுக்கு வழங்கியது.