Skip to main content

வரலட்சுமி சரத்குமாரின் அடுத்த பட படப்பிடிப்பு தொடக்கம்!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

Varalaxmi Sarathkumar

 

'காட்டேரி', 'பாம்பன்', 'பிறந்தாள் பராசக்தி', 'கலர்ஸ்', தெலுங்கில் பாலகிருஷ்ணா படம், கன்னடத்தில் ஒரு படம் எனப் பல படங்களைக் கைவசம் வைத்து பிஸியான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளார். 'அரசி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சூரியகிரண் இயக்குகிறார். இப்படத்தில் வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.

 

ராஜராஜா மற்றும் வரலட்சுமி இணைந்து தயாரிக்க, விபின் சித்தார்த் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, படம் குறித்த அப்டேட்களை அடுத்தடுத்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

என்.ஐ.ஏ-வால் சம்மன்; வரலட்சுமி விளக்கம்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

varalakshmi ani summon issue

 

போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாகத் தேசியப் புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ, நாடு முழுவதும் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மற்றும் ஏகே 47 துப்பாக்கிகள் கடத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கில் தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை மொத்தமாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜேஷ் ஹலீம் என்ற நபரின் உதவியுடன் இவை கடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியானது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 14வது நபராக இந்த வழக்கில் ஆதிலிங்கம் என்ற நபர் கைது செய்யப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம் நடிகை வரலட்சுமிக்கு உதவியாளராக பணியாற்றியது தெரியவந்துள்ளது.

 

போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் வழியாக வந்த பணத்தின் மூலம் சினிமாவில் பலருக்கும் ஆதிலிங்கம் பைனான்ஸ் உதவி செய்திருப்பதும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 'டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா' என்ற அரசியல் கட்சியில் தேசிய துணைத் தலைவராகவும் இவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. 

 

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நடிகை வரலட்சுமிக்கு ஏதேனும் தகவல்கள் தெரியுமா என்ற அடிப்படையில் விசாரிக்கவும், எந்த அடிப்படையில் ஆதிலிங்கம் உதவியாளராக இருந்தார் என்பது பற்றி தெரிந்து கொள்ளவும் நடிகை வரலட்சுமியிடம் விசாரிக்க திட்டமிட்டு என்.ஐ.ஏ, சம்மன் அனுப்பியுள்ளனர். தற்பொழுது ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்காக ஆஜராக இயலாது என அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. 

 

இந்நிலையில் வரலட்சுமி தனக்கு எந்த சம்மனும் வரவில்லை என தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த அறிக்கையில், "ஆதிலிங்கம் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ.வினால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட அனைத்து செய்திகளும் தவறானவை மற்றும் வெறும் வதந்திகள். அப்படி எந்த சம்மனும் எனக்கு அனுப்பப்படவில்லை.

 

ஆதிலிங்கம் 3 வருடங்களுக்கு முன்பு என்னுடன் ஃப்ரீலான்ஸ் மேலாளராக ஒரு குறுகிய காலம் மட்டுமே பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் நான் பல ஃப்ரீலான்ஸ் மேலாளர்களுடன் ஒரே நேரத்தில் பணிபுரிந்தேன். அவரது பதவிக் காலத்துக்குப் பிறகு இன்றுவரை எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 


 

Next Story

வரலக்‌ஷ்மி சரத்குமார்  போலீஸாக களம் இறங்கும்  'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்'

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Varalaxmi Sarathkumar Crime thrill movie

 

ஆஹா தமிழ் ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் படத்திற்கு 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

 

கதையம்சம் சார்ந்த நல்ல திரைப்படங்கள் விமர்சகர்கள், சினிமா பார்வையாளர்கள் என அனைத்துத் தரப்பிடமும் நல்ல வரவேற்பைப் பெறும். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களில்  ஒருவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் படங்களில் சிறந்த பரிமாணங்களைக் கொடுத்துள்ளார்.  சமீபத்தில் வெளியான ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் சினிமா பிரியர்களின் கவனத்தைக் கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, தனது அடுத்த இயக்கமாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆரவ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  படப்பிடிப்பை இப்போது முடித்துள்ளார். இந்தப் படத்தை தயாள் பத்மநாபனே தயாரிக்கவும் செய்கிறார். படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், தற்போது படத்திற்கு 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

 

இந்த தலைப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தயாள் பத்மநாபன் கூறுகையில், “அடிப்படையில், நான் ஹனுமானின் தீவிரமான பக்தர் மற்றும் அவரது இருப்பை உள்ளடக்கிய சில தலைப்புகளை என்னுடைய படங்களுக்கு வைக்க விரும்பினேன். இந்தப்படம் பல சாதக பாதகங்களைக் கொண்ட காவல் நிலையத்தின் பின்னணியில் நடக்கும் சம்பவங்களைக் கதையாகக் கொண்டது. உண்மையான ஸ்டேஷன் பெயர்கள் மற்றும் பகுதிகளை நாங்கள் இதில் படமாக்க விரும்பவில்லை. அதனால், 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்று கற்பனையான பெயரைக் கொண்டு வர முடிவு செய்தோம். தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது." என்றார்.

 

வரலக்‌ஷ்மி சரத்குமார்&ஆரவ் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நான்-லீனியர் பாணியில் புதிய பரிமாணத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.