Skip to main content

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படம் விரைவில் ஆரம்பம்?

Published on 25/06/2018 | Edited on 25/06/2018
vadivelu

 

 

 

வடிவேலு நடிப்பில் உருவான 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' என்ற பெயரில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டபடி சென்னையில் ரூ.6 கோடி செலவில் சரித்திர கால அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் படப்பிடிப்பை தொடங்கினார். அதில் நடித்த வடிவேலு இயக்குனருடன் கருத்து வேறுபாடு காரணமாக திடீரென்று படத்தில் இருந்து விலகினார். இதனால் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கில் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்காததால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு வடிவேலுவிடம் ரூ.9 கோடி நஷ்ட ஈடு பெற்று தரும்படி படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து தயரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் பட வேலைகளை தொடங்குவதில் தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானதால் படத்தில் இருந்து விலகியதாக வடிவேலு அறிவித்திருந்தார். 

 

 

 

பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ரூ.2 கோடி வாங்கிக் கொடுத்தால் படத்தில் நடிக்க தயார் என்றும் வடிவேலு கூறினார். இதையடுத்து இந்த புதிய சிக்கலை எப்படி சமாளிப்பது என்று தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து ஒரு முடிவு எடுத்துள்ளனர். அதன்படி வடிவேலு ஒன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது, அரங்கு அமைக்க ஆன செலவு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் என வட்டியுடன் மொத்தமாக ரூ.9 கோடியை வடிவேலு திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி வடிவேலு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் வடிவேலு தனக்கு தடை விதிக்கும் பட்சத்தில் அதை எதிர்த்து அவர் கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்து இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

யார் இந்த கான்ட்ராக்டர் நேசமணி...? எதற்கு இவ்வளவு மீம்ஸ்..? ஒரு ருசிகர ரிப்போர்ட் !

Published on 30/05/2019 | Edited on 30/05/2019
vadivelu

 

விஜய், சூர்யா, வடிவேலு நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள காமெடியை மையப்படுத்தி #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர். சமீபத்தில் ஒரு சமூகவலைத்தள க்ரூப்பில் ஒரு சுத்தியலின் படத்தை ஒருவர் பதிவிட்டு உங்கள் ஊரில் இதன் பெயர் என்ன என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு ஒருவர் இதற்கு பெயர் சுத்தியல். இதை எதன்மீதாவது அடித்தால் ‘டங்க் டங்க்’ என சத்தம் வரும். பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணி ஜமீன் மாளிகையில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது அவரது அண்ணன் மகன் ரமேஷ் கண்ணா, அவர் தலையில் போட்டுவிட்டார். இதனால் அவரது தலை உடைந்துவிட்டது. பாவம் என பதிவிட்டிருந்தார். இங்குதான் தொடங்கியது இந்த  #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக். 

 

 

இதைவைத்துதான் தற்போது நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான மீம்ஸ்களை கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு காண்டிராக்டர் நேசமணி என்ற கேரக்டரில் வீட்டிற்கு வெள்ளை அடிக்கும் காண்டிராக்டராக நடித்திருப்பார். ஒரு காட்சியில் சுவற்றில் உள்ள ஆணிகளை பிடுங்க வடிவேலு ரமேஷ் கன்னாவிற்கு உத்தரவு பிறப்பிற்பார். ரமேஷ் கண்ணா ஒரு படிக்கட்டு மேல் ஏறி ஆணிகளை பிடிங்கிக்கொண்டிருக்கும்போது கை தவறி சுத்தியல் கீழே நிற்கும் வடிவேலு தலையில் விழுந்து, அவர் மயக்கம் அடைந்து விடுவார். பிறகு சிறுது நேரம் கழித்து வடிவேலுவுக்கு தண்ணீர் தெளிக்கப்பட்டு கண்விழித்து விடுவார். இதைத்தான் நெட்டிசன்கள் தற்போது மீம்ஸ் மூலம் ட்ரெண்டாக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் வடிவேலுவின் காமெடிகள் தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு பெரும் தீனியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.