Skip to main content

புது படங்களை இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் ஜெயில் ! 

Published on 09/01/2019 | Edited on 09/01/2019
tamilrockers

 

 

புது படங்களை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவது தற்போது வழக்கமாக நடந்து வரும் நிலையில் இதை தடுக்க திரைப்பட சட்டம் 1952-ன் 7வது பிரிவு, அபராதம் விதிக்க வழி வகை செய்கிறது. இந்நிலையில், தண்டனையை இன்னும் கடுமையாக்குவதற்காக, இச்சட்டத்தில் புதிய உட்பிரிவை சேர்க்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், திரைப்பட சட்ட திருத்த வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது. இதன்படி, எழுத்து மூலமான அனுமதியின்றி திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வரைவு மசோதா குறித்து வரும் 14ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ் ராக்கர்ஸுக்கு தடை...

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் சினிமாக்களை தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் வெப் தொடர்களை தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரண்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் அனுமதியின்றி வெளியிடுகிறது. எனவே அந்த இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வித்திருந்தது.
 

tamil rockers

 

 

இந்த முவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார். பிறகு, தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரண்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு அவர் இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். 
 

இதனையடுத்து, இவ்வாறு தயாரிப்பு நிறுவனங்களின் காப்புரிமையை மீறும் இணையதளங்களை இடைநீக்கம் செய்யுமாறு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கும் உத்தரவிட்டார்.

 

 

Next Story

மத்திய அரசின் புதிய சட்டம்; ஆபத்தில் தமிழ்ராக்கர்ஸ்...

Published on 01/02/2019 | Edited on 01/02/2019

 

dfgdfv

 

வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் திரைப்படத்துறையை அதிகம் பயமுறுத்துவது பைரசி எனும் திருட்டுதனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் செயல் தான். படம் ரிலீஸ் ஆனவுடன் திரையரங்குகளில் ஓடும் படத்தை வீடியோ எடுத்து அதனை ரிலீஸ் அன்றே இணையத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

இதனால் திரைத்துறை பெரும் நஷ்டங்களை சந்திப்பதாக திரைத்துறையினர் வெகுகாலமாக புலம்பி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக படத்தை இணையத்தில் வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் இணையதள உரிமையாளரை கண்டுபிடிக்கும் பணிகளும் நடைபெற்று கடைசியில் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், 'திரைப்படத்துறையில் வேகமாக வளர்ந்துவரும் வீடியோ பைரசியை தடுக்க ஒளிப்பதிவு சட்டத்தின்படி புதிய விதிகள் இயற்றப்படும். சட்டவிரோத திரைப்படங்கள் திருடப்படுவதை தடுக்க புதிய சட்ட விதிகளும் உருவாக்கப்படும்' என தெரிவித்தார். இந்த திட்டமாவது தமிழ்ராக்கர்ஸை கட்டுப்படுத்துமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.