Skip to main content

"நான் சந்தித்த மிகச் சிறந்த நபர்களில் ஒருவர் அவர்" - நடிகை தபு உருக்கம்!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

ghfsbfsds

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துப் பிரபலமான இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், சென்ற ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்குக் காரணம் பாலிவுட்டில் நடக்கிற குடும்ப ஆதிக்கமே என்று சமூக ஊடகங்களில் பலரும் குற்றம்சாட்டினர். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இருப்பினும், அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மத்திற்கு இதுவரை அவர்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

 

இந்த நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இன்றுடன் ஓராண்டாகிறது. இதையொட்டி #SushantSinghRajput என்ற ஹேஷ்டேக்கும் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது. மேலும், பிரபலங்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்துவருகின்றனர். அந்தவகையில், புதிதாக ட்விட்டரில் இணைந்திருக்கும் நடிகை தபு சுஷாந்த் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்... "நான் சந்தித்த மிகச் சிறந்த நபர்களில் ஒருவர் அவர். அவரது ஆற்றல், உற்சாகம் மற்றும் அவரது முழு மகிழ்ச்சியான புன்னகை ஆகியவை என்றென்றும் நம் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அவரைப் போன்று இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" - தமன்னா

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

tamannaah about tabu

 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட சில இந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வந்த தமன்னா தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் 'போலா ஷங்கர்', இந்தியில் 'போலே சூடியன்' மற்றும் மலையாளத்தில் 'பாந்த்ரா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர்.சி இயக்கி வருவதாகக் கூறப்படும் 'அரண்மனை 4' படத்தில் நடித்து வருவதாக முணுமுணுக்கப்படுகிறது.

 

இந்த நிலையில் தமன்னா, நடிகை தபு மீது க்ரஷ் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், "இன்றைய சூழல் முற்றிலும் மாறிவிட்டது. அதை விரும்புகிறேன். நான் நடிகைகள் கரீனா கபூர், தபு போன்றோரை பார்த்து வளர்ந்த ஒரு நபர். அவர் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொண்ட நடிகைகள். குறிப்பாக தபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு வயதிலும் நம் பெண்கள் அவரை போன்று இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

 

விஜய் வர்மாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அவ்வளவுதான். இதுபோன்ற காதல் வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. அவை அனைத்தையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இதற்கு மேல் இதுபற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. நடிகர்களை விட நடிகைகளே அதிகமாக திருமண வதந்திகளில் சிக்குகிறார்கள். அது ஏன் நடக்கிறது என்பது தெரியவில்லை. இதனால், நான் பலமுறை திருமணம் செய்து கொண்டதாக உணர்கிறேன். ஆனால், உண்மையில் நான் திருமணம் செய்துகொண்டால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. அவர்கள் உற்சாகமாவார்களா அல்லது இதுவும் வதந்திதான் என நினைப்பார்களா" என்றார்.  

 

 

Next Story

"திருமணம் செய்யாமலேயே தாயாக முடியும்" - தபுவின் பேச்சால் சலசலப்பு

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

actress tabu controversy speech

 

 

காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான தபு இருவர், சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து வந்த தபு ஒரு காலகட்டத்தில் இந்தி படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.   

 

இந்த நிலையில் திருமணம் குறித்து தபு பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பேட்டியில், "அனைத்து பெண்களைப் போல எனக்கும் தாயாக வேண்டும் என்று ஆசை உள்ளது. திருமணத்திற்கும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் சம்பந்தமில்லை.  நான் குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்பதற்காக கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை. திருமணம் செய்யாமலேயே வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார். தபுவின் இந்த கருத்து தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.