Skip to main content

"மாநாடு படம் சிம்புக்கு ஒரு மைல்கல்" - படம் பார்த்த பின் சுரேஷ் காமாட்சி பாராட்டு!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021
kvjujv

 

'ஈஸ்வரன்' படத்துக்கு பிறகு நடிகர் சிம்பு நடித்து வரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோல் தற்போது நடந்து வரும் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் சமூகவலைதளத்தில் வெளியிட்டார். 

 

அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்ற நிலையில், தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படப்பிடிப்பு தளத்தில் வெங்கட் பிரபு மற்றும் சிம்புவிடம் உரையாடும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்... "நான் பார்த்தவரைக்கும் ‘மாநாடு’ படம் சிலம்பரசனுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் ஒரு  மைல்கல்லாக அமையும். உடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''மாநாடு டிக்கெட் இலவசம்'' இளைஞர்களைக் குறிவைக்கும் காங்கிரஸ் - வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

'' manaadu tickets are free '' - Youth Congress targeting youth - Video released shocking!

 

அண்மையில் திரைக்கு வந்து நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள படம் 'மாநாடு'. டைம் லூப் கான்செப்டில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சிம்புவின் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் மட்டுமல்லாது வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரமும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இதனால் இளைஞர்கள் மத்தியில் இந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

 

'' manaadu tickets are free '' - Youth Congress targeting youth - Video released shocking!

 

இந்நிலையில் தியேட்டருக்கு வரும் இளைஞர்களிடம் எங்கள் கட்சியில் சேர்ந்தால், எங்களுக்கு வாக்களித்தால் மாநாடு படத்தின் டிக்கெட் இலவசம் என கோவை இளைஞர் காங்கிரஸார் சிலர் தியேட்டர் வாசலில் நின்று படம்பார்க்க வரும் இளைஞர்களிடம் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவை சுந்தராபுரம் அரசன் தியேட்டரில் மாநாடு படம் பார்க்கச் செல்லும் இளைஞர்களை குறிவைக்கும் சிலர் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டையை எடுத்துவந்து  காங்கிரசுக்கு வாக்களித்தால் மாநாடு படத்தின் டிக்கெட் இலவசம் எனக்கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வெளியான வீடியோவில், ''தம்பி எத்தனை பேர் இருக்கீங்க'' எனக்கேட்க, ''நாங்க நாலு பேர் இருக்கோம்'' என இளைஞர்கள் சொல்ல, ''சரி வரும்பொழுது ஆதாரும், ஓட்டர் ஐடியும் கொண்டுவாங்க காங்கிரசுக்கு சப்போர்ட் ஒரு ஓட்டு அவ்வளவுதான். நாங்க இங்கையே இருக்கோம்'' என்கிறார். மேலும் ''வேறு நண்பர்கள் இருந்தாலும் அவங்களிடமும் சொல்லுங்க'' எனக் கூறுகின்றனர்.

 

இதுகுறித்து விசாரித்தபோது, அகில இந்திய அளவில் இளைஞர் காங்கிரசுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான ஆன்லைன் தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் 7 தேதியோடு அந்த ஆன்லைன் தேர்தலுக்கான கடைசி நாள் என்பதால் இளைஞர்களைக் கூட்டமாக பிடித்து தேர்தலில் வாக்களிக்க வைக்க முடியாது என்ற நிலையில் இளைஞர்கள் கூடும் தியேட்டரை குறிவைத்துள்ளனர் கோவை  இளைஞர் காங்கிரசில் சிலர்.  

 

 

Next Story

"இவற்றை மனதில் கொண்டு கவனமாக செயல்படுங்கள்!"- கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்திய அண்ணாமலை!

Published on 28/11/2021 | Edited on 28/11/2021

 

"Act carefully with these in mind!" - Annamalai advises party executives!

 

பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், 'மாநாடு' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தினார். அத்துடன், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மாநாடு படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் சிம்பு வீடு முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். 

 

இந்த நிலையில், திரைப்படத்துறைக் குறித்து தேவையற்ற விமர்சனங்கள், கருத்துகளைக் கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்குப் புறம்பானக் கருத்துக்கள் வந்தால் அதை மக்களுக்கு  எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி, நம்முடைய கண்டனங்களை கடுமையாக பதிவும் செய்திருக்கின்றது. 

 

திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு அவர்கள் பார்த்த படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியின் சகோதர, சகோதரிகள். சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். 

 

கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. 

 

எப்பொழுது, எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில், பேசுவதைத் தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்!

 

நமது இலக்கு, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாக செயல்படுங்கள்! எனவே திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.