Skip to main content

"கோயம்பேட்டில் சக மாற்றுத்திறனாளி ஒருவரை நான் சந்தித்த அந்த தருணம்..." - நெகிழும் ‘அண்ணாத்த’ பாடகர் திருமூர்த்தி! 

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

Singer Thirumoorthi

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘வா சாமி...’ என்ற ஹிட் பாடலைப் பாடிய பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தியோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் உரையாடினோம். அந்த சந்திப்பில் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...  

 

"சினிமாவில் பின்னணி பாடகர் அந்தஸ்து எனக்கு கிடைத்தது ஒரு வீடியோவினால்தான். ஃபேஸ்புக்கில் வைரலான என்னுடைய வீடியோவைப் பார்த்து இமான் சார்தான் சினிமாவில் பாட முதல் வாய்ப்பு கொடுத்தார். எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் எல்லாம் அவரால் கிடைத்தவைதான். ஒரு பாடல் பாட வேண்டும் என்று இமான் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. பாடும்போது ‘அண்ணாத்த’ படத்திற்குத்தான் பாடுகிறோம் என்று எனக்குத் தெரியாது. பாடி முடித்த பிறகு சூப்பர் ஸ்டார் படத்திற்கு நீங்கள் பாடியிருக்கீங்க என்று இமான் சார் சொன்னார். பின்பு, ரஜினி சார் பாட்டு கேட்டுவிட்டு ரொம்ப நல்லா இருக்கு என பாராட்டு தெரிவித்ததாகவும் வீடியோ மேக்கிங்கின்போது இமான் சார் சொன்னார்.

 

நான் முறைப்படி சங்கீதம் கற்றதில்லை. சின்ன வயதிலிருந்தே கேட்கிற பாடல்களை மீண்டும் மீண்டும் பாடி பயிற்சி எடுப்பேன். எஸ்.பி.பி. அவர்களும் முறையாக சங்கீதம் கற்றவரில்லை. சங்கீதம் கற்காமல் பாடல் பாடுவதில் எனக்கு ரோல் மாடல் அவர்தான். ‘அண்ணாத்த’ படத்தில் பாடல் பாடிய விஷயம் தெரிந்ததும் எங்கள் ஊர் நொச்சிப்பட்டியில் அனைவரும் சந்தோசப்பட்டாங்க. சூப்பர் ஸ்டார் படத்துல பாடுறது ரொம்ப பெரிய விஷயம் என்று நிறைய பேர் பாராட்டினார்கள். ‘வா சாமி...’ பாடல் பதிவு முடிந்த பிறகு, பாடலாசிரியர் அருண் பாரதி ஃபோன் செய்து, "என்னுடைய வரிகளுக்கு உயிர் கொடுத்து பாடியிருக்கீங்க. இந்தப் பாடலில் உங்களுடைய பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது" எனப் பாராட்டினார். 

 

ரஜினி சார் படத்துல பாடினதையே பெரிய சாதனையாக நினைக்கிறேன். இதைவிட பெரிய சாதனை இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ரஜினி சாரை நேரில் சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. திருமூர்த்தி எப்படி இருக்கீங்க என்று அவர் என் பெயரைக் கூறுவதைக் கேட்டாலே எனக்குப் பெரிய விஷயமாக இருக்கும். 

 

ஒருநாள் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளி ஒருவரை கோயம்பேட்டில் சந்தித்தேன். அவருடன் பேசும்போது, ‘வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிற மாற்றுத்திறனாளிகளுக்கு உதாரணமாக நீங்க இருக்கீங்க. உங்களை சந்தித்தது பெரிய விஷயம்’ என்றார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணமாக அது இருந்தது".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

”என் கையைப் பிடிச்ச உடனே ரஜினி கேட்ட அந்தக் கேள்வி” - அண்ணாத்த நினைவுகள் பகிரும் வெள்ளப்பாண்டி

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

Vellai Pandi

 

திருமகன், சிவப்பதிகாரம், கருப்பசாமி குத்தகைக்காரர், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான வெள்ளப்பாண்டி, தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அந்த சீரியலுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட வெள்ளப்பாண்டி, ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

திருமகன்தான் சினிமாவில் எனக்கு அறிமுகப்படம். அதன் பிறகு, சிவப்பதிகாரம், கருப்பசாமி குத்தகைக்காரர் என அடுத்தடுத்து படங்களில் நடித்தேன். அப்படியே சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். நான் வாய்ப்பு கேட்டு யாரிடமும் சென்று நின்றதில்லை. 56 வயதில்தான் சினிமாவுக்குள் வந்தேன். தேனியில் ஒரு கல்யாணத்திற்கு சென்றுவிட்டு வரும்போது, ஷூட்டிங்கை வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்றேன். அப்போது பட்டுச்சட்டை, பட்டுவேஷ்டி உடுத்தியிருந்தேன்.  இயக்குநர் ரத்னகுமார் சார்தான் என்னை அழைத்து, ஒரு பண்ணையார் கேரக்டர் இருக்கு நடிக்கிறியா எனக் கேட்டார். நானும் சரி என்று நடித்தேன். 

 

எம்.ஜி.ஆர். எனக்கு குலதெய்வம் மாதிரி. அவருடைய படம் என்றால் அந்தக் காலத்தில் தவறாமல் ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துவிடுவேன். அப்படி இருந்த நான் இன்றைக்கு சினிமாவில் நடித்துள்ளேன் என்பதை நினைக்கும்போது சந்தோசமாக உள்ளது. சினிமா எனக்கு கொடுத்ததுதான் அதிகம். 

 

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தாய்மாமாவாக நடித்திருந்தேன்.  முதல் நாள், ரஜினி சார் எனக்கு கைகொடுத்த உடனே நீங்க விவசாயியா என்றார். எப்படி சார் கண்டுபிடிச்சீங்க என்று கேட்டதற்கு உங்க கையைத் தொட்டாலே தெரியுது என்றார். மிகவும் பெருமையாக இருந்தது. பின், என்னுடைய வயதைக் கேட்டார். 70 சார், உங்க வயதுதான் சார் என்றேன். அவர் கையைக் காண்பித்து, என் கை எப்படி இருக்கு, உங்க கை எப்படி இருக்குனு பாருங்க என்றார். நான் நிலத்துல வெயில்ல உழைக்கிறேன் சார், நீங்க ஏ.சி.யிலயே இருக்கீங்க என்று கூறினேன். ரஜினி சாரோட இணைந்து நடித்ததுல ரொம்ப சந்தோஷம்.   

 

 

Next Story

''மழை இல்லை என்றால் அண்ணாத்த படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும்''-ரஜினிகாந்த் பேச்சு!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

'' If it had not rained, Annaththa's film would have been a huge success '' - Rajinikanth talk!

 

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் 'அண்ணாத்த'. இத்திரைப்படம்  பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

 

இந்நிலையில் அண்ணாத்த படம்  வெளியாகி 50வது நாள் ஆனதையொட்டி ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவு ஒன்றில், 'எதிர் விமர்சனம் இருந்தாலும், மழையை கடந்து அண்ணாத்த படம் வெற்றியடைந்துள்ளது. மழை இல்லை என்றால் அண்ணாத்த படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும் எனக் கூறியுள்ள அவர், 'பாட்ஷா'  படத்தின் 'நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிடமாட்டான் ஆனால் கெட்டவர்களை...' என்ற டயலாக்கை பேசியுள்ளார்.