Skip to main content

'நம்ம திரும்பி நின்னு மொறச்சா... அது தலதெறிக்க ஓடும்' - பரபரக்கும் 'சிந்துபாத்' டீசர் 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய்லாந்துக்கு சென்றுள்ள விஜய்சேதுபதி, அஞ்சலி ! 

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
vijay sethupathi

 

 

 

பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே.புரொடக்‌ஷன்ஸ் தற்போது விஜய் சேதுபதி, அஞ்சலி இணைந்து நடிக்கும் புதிய படத்தை  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியுள்ளது. 40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ள இப்படத்தின் பெரும்பகுதி வெளி நாட்டில் படமாகிறது. 'சேதுபதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கும் இப்படம் கமர்ஷியல் பார்முலாவுடன் கூடிய வித்தியாசமான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகவுள்ளது.

 

 

Next Story

விஜய் சேதுபதி மகன் சினிமா என்ட்ரி!

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
vijay sethupathi

 

 

 

விஜய் சேதுபதி நடிப்பில் ஜூங்கா, செக்க சிவந்த வானம், 96, சூப்பர் டீலக்ஸ், ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் நிலையில் இவர் தற்போது சீதக்காத, சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்த் படம், மணிகண்டனின் 'கடைசி விவசாயி' படம், மற்றும் அருண்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதில் அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துவங்கி படமாகி வந்த நிலையில், இதன் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தாய்லாந்து மற்றும் மலேசியா செல்லவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு அதிரடி சண்டைக்காட்சிகளை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதியுடன் நாயகியாக அஞ்சலி மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவருடைய மகன் சூர்யாவும் நடிப்பதாக கூறப்படுகிறது.