Skip to main content

''இது எனக்காக மட்டுமல்ல மனிதகுலத்துக்காகவும் எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி'' - சிபிராஜ்

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
vfdegsrhdr


கடந்த சில வாரங்களாக இந்தியாவை உலுக்கிவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாகப் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர்.


தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிபிராஜ் கரோனா தடுப்பூசி இரண்டாவது டோசையும் செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வேலை முடிந்தது! இன்று எனது 2வது டோஸ் தடுப்பூசியை எடுத்துவிட்டேன். கரோனா தடுப்பூசியை எனக்காக மட்டுமல்ல, நம் நாட்டின் பொறுப்பான குடிமகனாகவும், மனிதகுலத்துக்காகவும் எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி" என கூறியுள்ளார். இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய் போன்ற தலைவர்கள் உலகிற்குத் தேவை” - பிரபல நடிகர் வாழ்த்து

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
sibiraj about vijay political party name

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். 

இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சி பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
  
இந்த நிலையில் சிபிராஜ், “தளபதிக்கு முழு மனதுடன் தலை வணங்குகிறேன். அண்ணா தனது வார்த்தையைக் காப்பாற்றி அரசியலுக்கு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டார். ஒரு ரசிகனாக அவரது படங்களை பெரிய திரையில் பார்க்கத் தவறினாலும், அவரைப் போன்ற தலைவர்கள் உலகிற்குத் தேவை என்பதால் அவரது முடிவை நான் ஆதரிக்கிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

ஓடிடியில் சிபி சத்யராஜின் 'மாயோன்'

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

Maayon ott update

 

டபுள் மீனிங் புரொடக்‌ஷன் தயாரிப்பில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'மாயோன்'. கிஷோர் இயக்கிய இப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், ராதாரவி, பகவதி பெருமாள், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசையமைத்திருந்தார். 

 

புராண இதிகாச திரில்லர் ஜானரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கனடாவில் நடைபெற்ற 47வது டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புராண திரைப்பட விருதை வென்றது. இந்நிலையில் இப்படத்தின் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பை விரைவில் டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகவுள்ளது.