Skip to main content

தாய்மை அடைந்ததை ரசிகர்களிடம் பகிர்ந்த பாடகி!

Published on 04/03/2021 | Edited on 05/03/2021

 

Shreya Ghoshal

 

மேற்கு வங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல பின்னணிப் பாடகி ஷ்ரேயா கோஷல், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் பாடிவருகிறார். தமிழில், 'முன்பே வா', 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ள இவர், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், அனிருத், சந்தோஷ் நாராயணன் என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

 

ad

 

கடந்த 2015 ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஷ்ரேயா கோஷல், தற்போது கர்ப்பமாக உள்ளார். இத்தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஷ்ரேயா கோஷல், அப்பதிவில், "வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள எங்களுக்கு உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் தேவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இதனையடுத்து, திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் ஷ்ரேயா கோஷலுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரேயா கோஷல் குரலுக்காக ஏங்கிய ரசிகர்; இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திய ஏ.ஆர்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

ponniyin selvan next song release sep1st week

 

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

அண்மையில் வெளியான 'பொன்னி நதி' மற்றும் 'சோழா சோழா' ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே பாடகி ஸ்ரேயா கோஷல் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் ரசிகர் ஒருவர் ஏ.ஆர் ரஹ்மானை டேக் செய்து, ‘ஸ்ரேயா பாடிய பாடல் எப்போது வெளியாகும்’ என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, ‘அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும், காத்திருங்கள்’ என்று ஏ.ஆர் ரஹ்மான் பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்ரேயா கோஷல் ரசிகர்கள் ஏ.ஆர் ரஹ்மான் பதிவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

Next Story

'மாயவா தூயவா' ஸ்ரேயா கோஷல் குரலில் வெளியான பார்த்திபன் பட பாடல்

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

 'Maayava Thooyava' is a Parthiban film song sung by Shreya Ghoshal

 

பார்த்திபன், தமிழில் சமீபகாலமாக புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உலகிலேயே நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் ஆகும். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் 'இரவின் நிழல்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மாயவா தூயவா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ரேயா கோஷல் குரலில் வெளிவந்திருக்கும் இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார். பார்த்திபன் கதாபாத்திரத்தின் மீது கதாநாயகி வைத்திருக்கும் காதலை விவரிக்கும் வகையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.