பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் காலா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் காலா படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கேட்டு பதிவிட்டுருந்தார். அதில் காலா இசை உருவாக்கத்தில் உங்கள் எல்லோரையும் பங்கு பெற வைப்பது என்னுடைய கனவு. காலா படத்தின் அறிமுகப் பாடலுக்கான இசை எப்படியானதாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுடைய ஆலோசனையை பாடலில் சேர்ப்பது எனக்குப் பெருமை. மிக்க நன்றி!" எனக் பதிவிட்டு, ரெட்ரோ 80களின் இசை, ஸ்டைலிஷ் 90 - 2000த்தின் இசை, மார்டன் டே எலக்ட்ரோ இசை, மேற்கூறிய அனைத்தும் கலந்து’ என மொத்தம் நான்கு ஆப்ஷன்களைக் கொடுத்திருந்தார். பின்னர் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாக்களிக்கத் துவங்கினர். வாக்களிப்பின் முடிவில் "மேற்குறிய அனைத்தும் கலந்து" என்ற ஆப்ஷனுக்கு மக்கள் அதிக வாக்கு அளித்தனர். எனவே காலாவின் அறிமுகப் பாடல் வித்தியாசமாக அனைத்தும் கலந்த கலவையான இசையாக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களுக்கு தக்கபடி உருவாகும் காலா அறிமுக பாடல்
சார்ந்த செய்திகள்
Next Story
இவன்லாம் ஹீரோவான்னு சிரிச்சேன்
Next Story
ரஜினி ரசிகர்கள் மோதல் வேன்கள் கண்ணாடி உடைப்பு!!
ரஜினியின் காலா படம் ரிலீஸ் என்றது முதல் தினம் தினம் பரபரப்புதான்.
நேற்று தமிழகத்தில் காலா படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதுக்கோட்டை ஆர்.கே.பி திரையரங்கில் காலா படம் திரையிடப்பட்டது. கந்தர்வகோட்டை பகுதியில் இருந்து இரு வேன்களில் ரசிகர்கள் காலா பார்க்க வந்துள்ளனர். அப்போது திரையரங்கிற்குள் மற்றொரு குழு ரசிகர்களுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் உள்ளூர் ரசிகர்கள் பாதியிலேயே வெளியேறிவிட்டனர்.
இந்த நிலையில் படம் முடிந்து கந்தர்வகோட்டை ரசிகர்கள் தாங்கள் வந்த வேன்களில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது புதுக்கோட்டை நகரைக் கடந்து மச்சுவாடி பகுதியில் தயாராக நின்ற ஒரு கும்பல் ரஜினி ரசிகர்கள் வந்த வேன்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரு வேன் கண்ணாடிகளும் உடைந்து சிதறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் தப்பி சென்றுவிட்டனர். சம்பவம் குறித்து போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.