Skip to main content

சமுத்திரக்கனி, அலியா பட் என்று ஷாக் மேல் ஷாக் கொடுத்த ராஜமௌலி

Published on 14/03/2019 | Edited on 14/03/2019
alia


பாகுபலி-2 படத்திற்கு பின் எஸ்.எஸ். ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகிய இருவரையும் வைத்து இயக்குகிறார். இந்த படத்திற்கு படக்குழு பெயர் வைக்காமல் ஆர்.ஆர்.ஆர் என்று அழைக்கப்படுகிறது. 
 

இந்நிலையில், இன்று இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு ஹைதரபாத்தில் நடைபெறுகிறது. அப்போது இந்த படத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்று புதிய தகவலை அறிவித்துள்ளனர். படத்தின் நாயகிகளாக  இங்கிலாந்தை சேர்ந்த எட்கர் ஜோன்ஸ் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த அலியா பட் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ் நடிகரான சமூத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனான அஜய் தேவ்கனும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 

பாகுபலியை விட பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த படம், அடுத்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஜய் தேவ்கன் பட ரிலீஸ் அப்டேட்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
ajay devgn maidaan release update

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கடைசியாக கைதி பட இந்தி ரீமெக்கில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிங்கம் அகெய்ன், ரெய்டு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஷைத்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மாதவன், ஜோதிகா உள்ளிட்டோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனிடையே மைதான் என்ற தலைப்பில் அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ளார். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது.

Next Story

அனிமல் பட விமர்சனம் - ராஷ்மிகா குறித்து ஆலியா பட்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

alia bhatt about rashmika mandana in animal movie

 

அர்ஜூன் ரெட்டி, கபிர் சிங் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள படம் ‘அனிமல்’. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தன்னா, அனில் கபூர், பாபி தியோல், சக்தி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தை 4 பேர் தயாரித்துள்ளனர். 8 பேர் இசையமைத்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் நடிகையும் ரன்பீர் கபூரின் மனைவியுமான ஆலியா பட் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி போட்டுள்ள அவர், “சந்தீப் ரெட்டி வங்கா, உங்களை போல் யாரும் இல்லை. இந்தப் படத்தில் வருபவை அதிர்ச்சியூட்டுகிறது, ஆச்சரியப்பட வைக்கிறது. கூஸ்பம்ஸாகவும் இருக்கிறது. ராஷ்மிகா மந்தனா, படத்தில் மிக அழகாகவும் நேர்மையாகவும் இருக்கிறீர்கள். அந்த காட்சியில் உங்களை நான் ரசித்தேன். ரொம்ப ஸ்பெஷலாகவும் இன்ஸ்பைரிங்காகவும் இருந்தது” என குறிப்பிட்டு படக்குழுவை பாராட்டினார்.