Skip to main content

பிரபல நடிகர் படத்தில் சாய்பல்லவி இணைவதில் சிக்கல்?

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

sai pallavi

 

சச்சி இயக்கத்தில் ப்ரித்தீவ் ராஜ், பிஜு மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'ஐயப்பனும் கோஷியும்'. மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி நடிக்கின்றனர்.

 

ad

 

இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இக்கதையில் நடிக்க சாய் பல்லவியும் சம்மதித்திருந்தார். இந்த நிலையில், தற்போது, 'ஐயப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கில் நடிகை சாய் பல்லவி நடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இப்படக்குழுவினர் கேட்ட தேதியை, நடிகை சாய் பல்லவி ஏற்கனவே வேறு படத்திற்காக ஒதுக்கியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பாத சாய் பல்லவி, அதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்ததாகவும், அவை எதுவும் சரியாக அமையாததால் வேறு வழியின்றி இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதான் என் முகம்” - உண்மைச் சம்பவக் கதையில் மேஜராக சிவகார்த்திகேயன்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
sivakarthikeyan rajkumar periyasamy movie amaran update

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்திற்குத் தற்காலிகமாக 'எஸ்.கே 21' என அழைக்கப்பட்டு வந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. மேலும் இந்த கதாபாத்திரத்திற்காக ஹேர்ஸ்டைல் மாற்றியிருந்தார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பின் வெளியாகும் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘அமரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் வருகிறார். பயங்கரவாதிகளைத் தாக்க தனது டீமுடன், “இந்த ஆபரேஷனுக்கு எவனும் உன் முகத்த மூடாத. இதான் என் முகம், இந்தியன் ஆர்மியோட முகம்னு அவனுக்கு காட்டு” என வீரியமாக  அவர் பேசும் வசனங்கள் இடம் பெறுகிறது. 

இதுபோன்று தனது குழுவிற்கு தைரியம் கொடுக்கும் வகையில் அவர் பேசும் பல வசனங்கள் டீசர் முழுவதும் இருக்கிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன், “மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். தைரியம் மற்றும் வீரம் கொண்ட பயணத்திற்கு தயாராகுங்கள்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘சரட்டு வண்டில சிரட்டொலியில...’ - சாய் பல்லவியின் தங்கை நிச்சயதார்த்தம் (புகைப்படங்கள்)

Published on 25/01/2024 | Edited on 25/01/2024

 

சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன். இவர் சமுத்திரக்கனி நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான சித்திரைச் செவ்வானம் படத்தில் அறிமுகமாகியிருந்தார். கடந்த பொங்கலன்று, தனது காதலர் வினீத் என சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார். இருவருக்கும், கடந்த 21 ஆம் தேதி திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி மற்றும் அவரது குடும்பத்தார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.