Skip to main content

ஆர்யா பட உரிமையைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின் நிறுவனம்!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

Aranmanai3

 

சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாகப் படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிவருகிறது. இப்படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், அரண்மனை 3 படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, அடுத்த மாதம் 14ஆம் தேதி ஆயுதபூஜைத் தினத்தையொட்டி அரண்மனை 3 திரைப்படம் வெளியாகும் என ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடிடியில் புதிய சாதனை படைத்த ‘அரண்மனை 3’

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

aranmanai 3 movie create new record  OTT platform

 

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளங்களில் ஒன்றான ஜீ 5 தளத்தில் பல்வேறு இந்திய மொழிகளில், சிறந்த படைப்புகளைத் தயாரித்துவருகிறது. தமிழில் ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’, ‘விநோதய சித்தம்’ உள்ளிட்ட பல படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த ஜீ5 மேலும் பல சிறந்த பொழுதுபோக்கு படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

 

ad

 

அதன் வரிசையில், ஆர்யா, ராஷி கண்ணாவுடன் சுந்தர் சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 3’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து  கடந்த  12ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிய ‘அரண்மனை 3’ திரைப்படம், 12 நாட்களில் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா, இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ‘கேப்டன்’ படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ஓடிடியில் ரிலீசாகும் ஆர்யா படம்!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021
gvdfbfds

 

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளங்களில் ஒன்றான ஜீ 5 தளத்தில் பல்வேறு இந்திய மொழிகளில், சிறந்த படைப்புகளைத் தயாரித்துவருகிறது. தமிழில் ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’, ‘விநோதய சித்தம்’ உள்ளிட்ட பல  படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த ஜீ5 மேலும் பல சிறந்த பொழுதுபோக்கு படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

 

அதன் வரிசையில், கடந்த மாதம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ‘அரண்மனை 3’ திரைப்படம் நவம்பர் 12 அன்று ஜீ5 ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. சுந்தர். சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். ஆர்யா நடிப்பில் உருவான 'சார்பட்டா பரம்பரை' படம் ஏற்கனவே ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.