Skip to main content

அமீரகத்தில் நாசருக்கு கிடைத்த அங்கீகாரம்

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

Recognition for Nasser in the Dubai

 

தமிழ் சினிமாவில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஏற்றார் போல தன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துபவர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில் இன்று முக்கியமாக பார்க்கப்படுபவர் நாசர். இவர் 300-க்கும் மேற்பட்ட படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் 37 ஆண்டுகள் திரைத்துறையில் கடந்துள்ளார். அதனை கொண்டாடும் வகையில் சமூக வலைதளத்தில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். தற்போது நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறார். 

 

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நாசருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் அமீரகம் தொடர்ந்து இந்திய திரைப்பிரபலங்கள் பலருக்கும் கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை பெறுபவர்கள் 10 வருடங்களுக்கு துபாய் நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி, பார்த்திபன், மீனா, திரிஷா மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தலைமை மருத்துவரிடம் பேசினோம்” - விஜயகாந்த் உடல் நலம் குறித்து நாசர்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

nassar about vijayakath health condition

 

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

 

விஜயகாந்த் உடல்நிலை குறித்து கடந்த 29 ஆம் தேதி மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் சீராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சித் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்த்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் பேசியிருந்தார்.

 

இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி உள்ளிட்ட பலரும் விஜயகாந்த்தை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் உடல்நிலை குறித்து விஜயகாந்த்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளனர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது நாசர் பேசுகையில், “கேப்டன் நல்லாயிருக்கார். எல்லா புலன்களும் செயல்படுது. கொஞ்ச நாளாக வெளியான செய்திகளெல்லாம் மிகைப்படுத்தியதுதான். தலைமை மருத்துவரை பார்த்தோம். அவரும் நல்லாயிருப்பதாக சொன்னார். அதனால் மிகைப்படுத்தின செய்தியை யாரும் பரப்ப வேண்டாம். இரு மாதங்களுக்கு முன்னால் எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறார். அதனால் கேப்டன் திரும்ப வருவார். எங்களுடன் பேசுவார். எங்களுடன் தோன்றுவார்” என்றார்.  

 

 

Next Story

நாசரின் தந்தை மறைவிற்கு முதல்வர் இரங்கல்

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Chief Minister condoles of Nasser father passed away

 

தமிழ் சினிமாவில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஏற்றார்போல தன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துபவர்களில் முக்கியமானவர் நாசர். இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 38 ஆண்டுகள் திரைத்துறையில் பயணித்து வரும் நாசர் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 

 

இந்த நிலையில், நடிகர் சங்கத் தலைவர் நாசரின் தந்தை மாபுப் பாஷா இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 95. செங்கல்பட்டு தட்டான்மலை தெருவில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் மாபுப் பாஷா மறைந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது. திரையுலகினர் உள்ளிட்ட பலரும் நாசருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

அந்த வகையில் நாசர் தந்தையின் மறைவிற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசரின் தந்தை பாஷா, வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன். தந்தையின் மறைவால் வாடும் நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.