Skip to main content

போலீசாக ரஜினி...சந்தோஷமான ஒளிப்பதிவாளர்...ஹின்ட் கொடுத்த இயக்குனர் !

Published on 11/02/2019 | Edited on 11/02/2019
rajini

 

 

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன் மணிரத்னம் இயக்கிய தளபதி, ராவணன் மற்றும் விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது தன ட்விட்டர் பக்கத்தில் தான் ரஜினி படத்தில் இணையவுள்ளதாக அறிவித்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதில்.... "தளபதி படத்துக்குப் பின்னர் ரஜினியுடன் இணைவது உற்சாகமாகவுள்ளது" என பதிவிட்டுள்ளார். மேலும் இப்பதிவை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ரீ ட்வீட் செய்துள்ளார். 'பேட்ட' படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த ட்விட்டர் பதிவு மூலம் இந்த தகவல் உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினி போலீசாக நடிக்கவுள்ளதாகவும் புதிய தகவல் கசிந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சூப்பர்ஸ்டாருக்கு வில்லியாக லேடி சூப்பர்ஸ்டார் ! ரசிகர்கள் அதிர்ச்சி 

Published on 17/04/2019 | Edited on 17/04/2019
rn

 

 

k

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினி ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது ரஜினிக்கு வில்லியாக நயன்தாரா நடிப்பதாக புதிய தகவல் கசிந்து வருகிறது. மேலும் தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிவருவதாகவும், மகளாக நிவேதா தாமஸ் நடிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும் இப்படத்திற்காக 60 நாட்கள் நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

 

Next Story

மாலை...பரிவட்டம்...ஜிப்பா...தொடங்கியது தர்பார் !

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் பாரஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

Darbar

 

மேலும் இதனை  தொடர்ந்து  படப்பிடிப்பு பூஜையுடன் இன்று மும்பையில் துவங்கியது. இதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இதில் ரஜினி மாலை, பரிவட்டம், ஜிப்பா அணிந்திருந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.