Skip to main content

'அந்தாதுன்' தமிழ் ரீமேக்கில் பிரியா ஆனந்த்! வைரலாகும் புகைப்படம்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

vfgeages

 

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தி படம் 'அந்தாதுன்'. அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்தினர். ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் இதை ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக சித்தார்த், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக் உரிமத்தைப் பெற முயற்சித்தார்கள் என அப்போது தகவல் வெளியானது.

 

'தி பியானோ டியூனர்' என்ற பிரஞ்சு ஷார்ட் ஃப்லிமை தழுவி எடுக்கப்பட்ட 'அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சமீபத்தில் நடிகர் பிரஷாந்த் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானாவாக பிரஷாந்த் நடிக்கிறார். இப்படத்தை நடிகர் பிரஷாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லியாக தபு நடித்த வேடத்தில் சிம்ரன் நடித்து வந்த நிலையில், தற்போது நாயகியாக, ராதிகா ஆப்தே வேடத்தில், பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். பிரஷாந்துடன் பிரியா ஆனந்த் நிற்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"யோசிச்சி யோசிச்சி..." - வெளியானது பிரசாந்த் படத்தின் பாடல்

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

Prashanth Andhagan Yosichi Yosichi song release now

 

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தி படம் 'அந்தாதுன்'. அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்தனர். ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தமிழில்  அந்தகன் என்ற பெயரில் பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

 

ஏற்கனவே வெளியான முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது "யோசிச்சி யோசிச்சி..." என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, ஹரிஹரன் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். விரைவில் இப்படத்தின் ரீலிஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Next Story

"இன்னைக்கு நிறைய பேர் பிரம்மாண்டம்னு சொல்லலாம், கொண்டாடலாம், ஆனால்..." - பிரசாந்த் பேச்சு 

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

prashanth talk about rk selvamani

 

கடந்த 2018 ஆம்  இந்தியில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த ‘அந்தாதூண்' படத்தின் தமிழில் ரீமேக்கில் பிரசாந்த் நடித்து வருகிறார். தமிழில் அந்தகன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரஷாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் பிரசாந்த் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில்  பிரசாந்த், அவரது தந்தை தியாகராஜன், உள்ளிட்ட அந்தகன் படக்குழுவினருடன் இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

 

இவ்விழாவில் பேசிய பிரசாந்த், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி, 2 வருஷமாச்சு இப்படி பிறந்தநாள் கொண்டாடி. அந்தகன் படம் ரொம்ப நல்ல வந்திருக்கு. படம் பார்த்தவர்கள் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இருக்குன்னு சொல்றாங்க ஆர்.கே செல்வமணி சார் எப்போதும் சிரிச்சுகிட்டே இருப்பாரு. அவருக்கு கோவமே வராது, அப்படி வந்த செட்ல எல்லாரும் அடங்கி போயிடுவோம். தமிழ் சினிமால எல்லாரும் பிரம்மாண்டம், பிரம்மாண்டம்னு சொல்லிட்டு இருக்கோம். அந்த பிரம்மாண்டம் 90 களில் எங்களுக்கு ஒரு பெரிய சகாப்தம். ஒரு பாடலுக்கு 500 நடன கலைஞர்களை வைத்து பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி  வெளியிட்ட முதல் இயக்குநர் ஆர்.கே செல்வமணி சார்தான்.

 

இன்னைக்கு நிறைய பேர் பிரம்மாண்டம்னு சொல்லலாம், கொண்டாடலாம். ஆனால் அதை முதலில் கொண்டாடுவது ஆர்.கே செல்வமணி சார்தான். அவர் தான் சினிமாவின் பரிணாமத்தை மாற்றியவர். சினிமாவை இப்படியும் எடுக்க முடியும், இவ்வளவு பெருசா பண்ண முடியும்னு சாதித்து காட்டினார். நிறைய விஷயம் எனக்கு தெரியும்னு சொன்னாங்க. ஆனால் அதற்கு காரணம் என தந்தையும், ஆர்.கே செல்வமணி சார் மட்டும்தான். அவங்ககிட்ட இருந்துதான் நான் எல்லாம் கத்துக்கிட்டேன்" எனத் தெரிவித்தார்.