Skip to main content

12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ‘வில்லு’ பட கூட்டணி!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

vijay

 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ள படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார். ‘தளபதி 66’ எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். சமீபத்தில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்திற்கான முதற்கட்ட பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  நடிகர் பிரகாஷ் ராஜ் கடைசியாக விஜய்யுடன் இணைந்து ‘வில்லு’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி 12 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் விஜய் - பிரகாஷ் ராஜ் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலிவான உரை” - பிரதமரின் பேச்சுக்கு பிரகாஷ் ராஜ் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Prakash Raj condemns pm modi spech

18ஆவது நாடாளுமன்ற தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என பேசினார். இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடியின் இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டித் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “அவமானம்... இந்த மலிவான உரையை வரலாறு ஆவணப்படுத்தும்; பிரதமர் மோடி வெறும் அதிகாரத்திற்கு ஆசைப்படுபவராக இருக்கிறார்; முதற்கட்ட வாக்குப்பதிவு அவரை உலுக்கியுள்ளது; காத்திருங்கள், மக்கள் அவருக்கு பாடம் கற்பிப்பார்கள்” என பதிவிட்டுள்ளார். 

Next Story

“ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடக்கும் தேர்தல்” - பிரகாஷ் ராஜ்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
prakash raj shard a election viral song

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. 

அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ‘தேசத்தின் துயரக் குரல்’ என்ற தலைப்பில், ஒப்பாரி வடிவிலான பிரச்சாரப் பாடல் வெளியாகி, இந்திய அளவில் வைரலாகி வருகிறது. இப்பாடலை புத்தர் கலைக் குழுவைச் சேர்ந்த மகிழினி மணிமாறன் பாடியுள்ளார். இப்பாடலை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர் 

அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ், இப்பாடலை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடக்கும் தேர்தல். எதை நாம்  தேர்ந்தெடுக்க போகிறோம்?” என பதிவிட்டுள்ளார்.