Skip to main content

இறுதிக்கட்டத்தில் 'என்.ஜி.கே...' விரைவில் ரிலீஸ் !  

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
ngk

 

 

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் 'என்.ஜி.கே' படம் சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் நாயகிகளாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தற்போது துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நேர்த்தியென்று ஏதுமில்லை; தன் படம் குறித்து இயக்குநர் செல்வராகவன்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

 selvaraghavan tweet about ngk movie

 

இயக்குநர் செல்வராகவனின் படங்கள், வெளியான பத்தாண்டுகளுக்கு பிறகு தான் கொண்டாடப்படும் என்று சொல்வதுண்டு. அதற்கேற்றார் போல் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்கள் மீண்டும் திரையரங்கில் திரையிட்டபோது பெரிய வரவேற்பைப் பெற்றன. ஆனால், இதை இப்போதே பார்க்க முடியவில்லையே. பத்து வருடம் கழித்தெல்லாம் எப்படி பார்ப்பது போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். அதை அவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் அவரது படம் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தில் சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், இளவரசு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. வணிக ரீதியில் பெரிய வசூலையும் ஈட்டவில்லை. இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகளான நிலையில் படம் குறித்து இயக்குநர் செல்வராகவன் ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில் “நேர்த்தி என்று எதுவும் இல்லை. எங்களிடம் குறைபாடுகள் உள்ளன. அது நல்லது. ஒரு வைரத்தை போன்றது” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

யார் அந்த ரகு, செந்தில்?... செல்வராகவன் அடுத்த படம் குறித்து ட்வீட்...

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

கடந்த வருடம் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. செல்வராகவனின் ரசிகர்களின் பல வருட காத்திருப்பிற்கு பின்னர் வந்த படம் என்பதால் இந்த படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்திற்கு முன்பாக செல்வராகவன் எடுத்த மன்னவன் வந்தானடி, நெஞ்சம் மறப்பதில்லை படம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரிலீஸாகாமல் உள்ளது. இதில் நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் வெளியாகலாம் அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.
 

selvaraghavan

 

 

இந்நிலையில் செல்வராகவன் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளை எப்போதோ தொடங்கிவிட்டார். கலைப்புலி. எஸ். தாணு தயாரிப்பில் தனுஷை வைத்து அடுத்த படத்தை எடுக்க போகிறார் என்றெல்லாம் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தற்போது ட்விட்டரில் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையின் இறுதி கட்டத்தில் இருப்பதாக ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளார் செல்வராகவன். அந்த ஸ்கிரிப்டில் ரகு, செந்தில் என்று இரண்டு கதாபாத்திரங்களின் பெயர் தெரிகிறது. அதை குறிப்பிட்டு இது என்ன படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.