Published on 01/08/2018 | Edited on 01/08/2018

'துருவங்கள் பதினாறு' படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கியுள்ள 'நரகாசூரன்' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இயக்குநர் கார்த்திக் நரேன், நடிகர் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் ஆத்மிகா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாடல்களே இல்லாத இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.