Skip to main content

இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் தந்த நாக சைதன்யா

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

Naga Chaitanya explaining about his second marriage

 

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் நடிகை சமந்தாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். சமீபத்தில் நாகா சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி வருகிறார் என தகவல் வந்தது.

 

இந்நிலையில் இந்த தகவலை நாக சைதன்யா தரப்பு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரின் விவாகரத்து நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும், இரண்டாவது திருமணம் குறித்த எண்ணம் தற்போது நாக சைதன்யாவிற்கு இல்லை எனவும் அந்த தரப்பு விளக்கம் அளித்துள்ளது.  

 

நாக சைதன்யா வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாக சைதன்யாவுடன் ஜோடி போடும் சாய் பல்லவி

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

sai pallavi to pair with naga chaitanya in new movie

 

நாக சைதன்யாவின் 23வது படத்தை, சந்து மொண்டேடி இயக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்குகிறார். இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகும் நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கதாநாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளார். மேலும், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை விரைவில் தயாரிப்பு குழு அறிவிக்கவுள்ளனர். 

 

 

Next Story

சமந்தாவை பார்த்து வெளியேறினேனா?- நாக சைதன்யா விளக்கம்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

naga chaitanya samantha issue

 

கன்னடத்தில் நிதின் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் பிரஜ்வல், மஞ்சுநாத் நாயக்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'ஹாஸ்டல் ஹுடுகாரு பேககிடாரே' (Hostel Hudugaru Bekagiddare). இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு 'பாய்ஸ் ஹாஸ்டல்' என்ற தலைப்பில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியானது. 

 

இப்படத்தின் தெலுங்கு பதிப்பு, ஹைதராபாத்தில் சிறப்பு திரையிடல் நடந்ததாகவும் அதில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. முதல் பாதி முடிந்ததும், இடைவெளியில் சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவரவுள்ள குஷி படத்தின் ட்ரைலர் ஒளிபரப்பப்பட்டதாகவும் அதனால் நாக சைதன்யா திரையரங்கை விட்டு படம் பார்க்காமல் பாதியிலே வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியானது. 

 

இந்நிலையில் இந்த தகவல் குறித்து பிரபல ஆங்கில ஊடகத்திற்கு விளக்கமளித்துள்ளார் நாக சைதன்யா. அவர் கூறுகையில், "இது முற்றிலும் போலியானது. சில தெலுங்கு இணையதளங்கள் இந்த வதந்தியை ஆரம்பித்து விட்டன. அதை சரி செய்யும்படி ஏற்கனவே அவர்களிடம் சொல்லிவிட்டேன்" என்றுள்ளார். 

 

நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், பின்பு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர். அதன்படி இருவரும் தற்போது பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர் என்பது நினைவுகூரத்தக்கது.