Skip to main content

"ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு பெருகும் என நம்புகிறேன்" - சூப்பர் ஹீரோ பட இயக்குநர் பேச்சு!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

Minnal Murali

 

இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில், டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'மின்னல் முரளி' திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது. 90களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதையை இப்படம் பேசுகிறது. மனித உணர்வுகளின் பல பக்கங்களைத் தொட்டுச்செல்லும் இத்திரைப்படம் பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாகவும், குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாகவும் உருவாகியுள்ளது. நேரடியாக மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது.

 

ad

 

முன்னதாக கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட  'மின்னல் முரளி' படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் போனஸ் ட்ரைலரை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்த ட்ரைலர் குறித்து இயக்குநர் பாசில் ஜோசப் கூறுகையில், “ட்ரைலருக்கு கிடைத்த பெரும் வரவேற்பில் நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இப்படம் குறித்து ரசிகர்கள் அறிந்துகொள்ள, இந்த போனஸ் டிரெய்லர் மூலம் படத்தில் என்ன வரப்போகிறது என்பதைப் பற்றிய ஒரு தெளிவை தர படத்தின் ஸ்னீக் பீக்கைப் பகிர முடிவு செய்தோம். ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குவதும், படத்தின் மூலம் அவர்களை மகிழ்விப்பதும்தான் எங்களின் முக்கிய முயற்சி. போனஸ் ட்ரைலர் மூலம் படம் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு பெருகுமென நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" எனக் கூறினார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஸ்கர் ரேஸ்; தேர்வானதா 2018?

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
2018 movie out of the oscar race

உலகத் திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு மலையாள படமான '2018' படம் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. 

ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகப் படக்குழு குறிப்பிட்டிருந்தது. கேரளாவில் வெள்ளம் வந்தபோது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விரிவாகப் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற பெருமையும் பெற்றது. 

இந்த நிலையில் சிறந்த சர்வதேசத் திரைப்பட பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 2018 இடம் பெறவில்லை. மேலும் அந்த 15 படங்களின் பட்டியலை 2018 பட இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப், அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, அவரின் படத்திற்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான 96வது ஆஸ்கர் விருது அடுத்த ஆண்டு மார்ச் 10 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது.    

Next Story

“2018 அந்த தியரியை பிரேக் செய்தது...” - தேர்வுக் குழு உறுப்பினர் பெப்சி விஜயன் விளக்கம் 

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

fefsi vijayan about 2024 oscar entry indian film 2018

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, சிறந்த கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான அந்த பிரிவின் ஆஸ்கர் விருது போட்டிக்கு மலையாள படமான '2018' படம் இந்திய சார்பில் அனுப்ப தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதையடுத்து அந்த தேர்வுக் குழுவின் உறுப்பினராக இருக்கும் பெப்சி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அவர் பேசுகையில், "மாமன்னன் படத்தில் எமோஷன் அருமையாக இருந்தது. ஆனால் உள்ளே என்ன பேசினோம் என்பதை வெளியில் சொல்ல முடியாது. தேர்ந்தெடுக்கும் போது இந்தியாவில் உள்ள எல்லா இடத்திலிருந்தும் வந்திருந்தாங்க. 

 

இந்தியாவில் இருந்து ஒரு படம் தேர்வாக வேண்டும் எனும்போது, ஒரு தமிழனா உள்ளுக்குள்ள அந்த உணர்வு எக்கச்சக்கமா இருந்தது. ஆனால் எல்லாரும் சேர்ந்து ஒரு விஷயத்தை சொன்னார்கள் என்றால் அதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும். திரைப்படம் என்றால் ஒரு ஹீரோ, வில்லன், காமெடியன் என ஒரு தியரி இருக்கிறது. அதை பிரேக் செய்த படம் 2018. இதில் வில்லன் என்று பார்த்தால் அது எமோஷன் தான். 

 

மேலும் அமெரிக்க ஸ்டைலில் இருக்கக் கூடிய படமாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக இருக்கும். இதில் எல்லாரும் ஒத்துப் போய் ஒட்டுமொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படம் தான் 2018. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ப்ரோமோஷனுக்காக நிறைய பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. அப்படி செய்தால் தான் ஆஸ்கரை கொண்டு வர முடியும். இப்போது தான் இந்திய அரசு நாம் தேர்ந்தெடுக்கிற படத்துக்கு ப்ரோமோஷன் செய்ய ரூ.1 கோடி தர சம்மதித்துள்ளது" என்றார்.