Skip to main content

இந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் மைக் டைசன்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

LIGER

 

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகிவரும் படம் 'லைகர்'. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

 

இந்த நிலையில், 'லைகர்' படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மைக் டைசன் சம்மந்தப்பட்ட காட்சிகளைக் கோவாவில் படமாக்க திட்டமிட்டுள்ள படக்குழு, தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இது இந்திய சினிமாவில் மைக் டைசனின் அறிமுகப்படமாகும்.

 

'லைகர்' படத்தில் மைக் டைசனுடன் இணைவது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் தேவரகொண்டா, "இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக உலகின் மோசமான மனிதன், பாக்சிங் கடவுள், இரும்பு மனிதன் மைக் டைசன் 'லைகர்' படத்தில் இணைகிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ‘லைகர்’ படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ரூ.1 கோடி பரிசு ஓகே; எங்களுக்கு ரூ. 8 கோடி நஷ்டமே..." - அதிர்ச்சியில் விஜய் தேவரகொண்டா

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

vijay devarakonda shocked about his movie  Distributors company post

 

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் கடந்த 1 ஆம் தேதி வெளியான படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருந்தார். பான் இந்தியா படமாகத் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்திருந்தது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 7 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை படக்குழுவினர் அண்மையில் நடத்தினர். அதில் பேசிய விஜய் தேவரகொண்டா, "ரூ.1 லட்சம் வீதம் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காசோலையாக வழங்கவுள்ளேன். நான் கொடுக்கும் பணம் மூலம் உங்களது வாடகை, கட்டணம் ஆகியவற்றிற்கு செலுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்றார். அவரது சம்பளத்தில் ஏழை எளிய மக்களுக்கு 1 கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது. 

 

இதையடுத்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' படத்தின் விநியோக நிறுவனமான அபிஷேக் பிக்சர்ஸ், அவருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டியர் விஜய் தேவரகொண்டா. வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் விநியோகம் செய்ததில் நாங்கள் ரூ. 8 கோடிகளை இழந்துள்ளோம். ஆனால் அதற்கு யாரும் பதிலளிக்கவில்லை.

 

இப்போது நீங்கள் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளீர்கள். தயவுசெய்து எங்களையும் எங்கள் விநியோகஸ்தர்கள் குடும்பங்களையும் காப்பாற்றுங்கள் என்ற நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனப் பதிவிட்டிருந்தனர். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைக் கேட்டு விஜய் தேவரகொண்டா அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

Next Story

100 குடும்பங்களுக்கு ரூ.1 கோடி - விஜய் தேவரகொண்டா பரிசு

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Vijay Deverakonda to Donate Part of Kushi Remuneration

 

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் கடந்த 1ஆம் தேதி வெளியான படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருந்தார். பான் இந்தியா படமாகத் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. 

 

இந்த வெற்றியை கொண்டாட நிகழ்ச்சி ஒன்றை படக்குழுவினர் நடத்தினர். அதில் படக்குழுவினர் கலந்து கொண்டு வெற்றியை பகிர்ந்தார். அப்போது பேசிய விஜய் தேவரகொண்டா பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசிய நிலையில், அவரது சம்பளத்தில் ஏழை எளிய மக்களுக்கு 1 கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ரூ.1 லட்சம் வீதம் 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காசோலையாக வழங்கவுள்ளேன். நான் கொடுக்கும் பணம் மூலம் உங்களது வாடகை, கட்டணம் ஆகியவற்றிற்கு செலுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்றார்.