Skip to main content

முன்னணி நடிகரின் படத்திலிருந்து வெளியேறிய மஞ்சு வாரியர்

Published on 25/07/2022 | Edited on 25/07/2022

 

Manju Warrier left from prithiviraj film kaapa

 

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில்  'அசுரன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'ஏகே 61' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாகும் 'காப்பா' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை முதலில் வேணு இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்பு சில காரணங்களால் அவர் வெளியேறி தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கி வருகிறார். 

 

ad

 

இந்நிலையில் 'காப்பா' படத்திலிருந்து மஞ்சு வாரியர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் இயக்குநர் மாறியுள்ளதால் படப்பிடிப்பு தேதியில் குழப்பம் ஏற்பட்டு தற்போது மஞ்சு வாரியருக்கு கால்ஷீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் மஞ்சு வாரியர் இதனை அதிகாரபூர்வமாக சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல நடிகையின் காரில் பறக்கும் படை சோதனை!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Popular actress car flying force test

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் அந்த வழியாக தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர் வந்துள்ளார். அப்போது அவர் வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதே சமயம் மஞ்சு வாரியரைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 

Next Story

மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணியின் லூசிஃபர் 2; புது அப்டேட் வெளியீடு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

lucifer 2 shooting starts update

 

மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் சிரஞ்சீவி நடிப்பில் 'காட்ஃபாதர்' என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. 

 

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகக் கடந்த ஆகஸ்டில் அறிவிப்பு வெளியானது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரிக்க முரளி கோபி கதை எழுதுகிறார். 'எம்புரான்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ப்ரித்விராஜ் இயக்குகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். 

 

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகப் படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. மேலும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருடன் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக மலையாளத் திரையுலகில் காலடி வைக்கிறார் தயாரிப்பார் சுபாஸ்கரன். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.