Skip to main content

விக்ரம் பிரபுவை அழைத்த மணிரத்னம் 

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
maniratnam

 

 

 

விக்ரம் பிரபு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள 'துப்பாக்கி முனை' படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில் 'துப்பாக்கி முனை' படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த டீசரை பார்த்த இயக்குனர் மணிரத்னம் விக்ரம் பிரபு மற்றும் படக்குழுவை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இப்படத்தின் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் அலைபாயுதே படத்திற்கு கதை எழுதிய ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்தின் உதவி இயக்குனரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. எல்.வி முத்துகணேஷ் இசையமைதுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தூப்பாக்கி முனை' வெற்றி விழா கொண்டாடிய படக்குழு 

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
thuppaaki

 

 

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து, விக்ரம் பிரபு நாயகனாக நடித்த 'தூப்பாக்கி முனை' திரைப்படம் வெற்றிகரமாக 25வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த 25வது நாள் வெற்றிவிழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு  ஆகியோர் கலந்து கொண்டனர்.  மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி. மிர்ச்சி ஷா மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்துகொண்டு 'துப்பாக்கி முனை' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.


 

Next Story

ஹன்சிகா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் !

Published on 12/12/2018 | Edited on 12/12/2018
hansika

 

 

 

மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஆரம்பத்தில் கொஞ்சம் குண்டான தோற்றத்துடன் நடித்த ஹன்சிகாவை ரசிகர்கள் அன்பாக குட்டி குஷ்பூ என்று அழைத்தனர். பிறகு வெற்றிகரமாக பப்லியான தோற்றத்துடன் முதல் ரவுண்டை முடித்த ஹன்சிகா தன் இரண்டாவது ரவுண்டில் சற்று மெலிந்து அழகான தோற்றத்துடன் மான் கராத்தே படம் மூலம் மீண்டும் ஒரு வந்தார். இதையடுத்து புகழின் உச்சியில் இருக்கும் போதே சமீபமாக அதிகப்படங்களில் நடிக்காமல் சில காலம் ஓய்வில் இருந்த ஹன்சிகா மீண்டும் மிகவும் உடல் மெலிந்த தோற்றத்துடன் வரும் டிசம்பர் 14ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள 'துப்பாக்கி முனை' படம் மூலம் தனது மூன்றாவது ரவுண்டை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தை தொடர்ந்து 100 மற்றும் மகா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.