Skip to main content

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் யோகி பாபுவின் மண்டேலா!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

yogi babu

 

மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி வெளியான படம் 'மண்டேலா'. திரையரங்க வெளியீடு இல்லாமல் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்னர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

இந்த நிலையில், 'மண்டேலா' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான இந்திய அரசின் பரிந்துரைக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது பிரிவிற்கு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் வெளியான படங்களில் சிறந்த படம் ஒன்றை தேர்வு செய்து அனுப்புவது வழக்கம். அந்தப் படங்கள் ஆஸ்கர் விருது தேர்வு குழுவினரால் மதிப்பிடப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட படத்திற்கு சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்படும்.

 

அந்த வகையில், இந்த வருடத்திற்கான இந்திய அரசின் பரிந்துரைக்கான தேர்வு பட்டியலில் யோகி பாபுவின் மண்டேலா திரைப்படம் உட்பட மொத்தம் 14 படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் 14 படங்களையும் இயக்குநர் ஷாஜி என். கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு பார்த்து, அதிலிருந்து ஒரு படத்தைத் தேர்வுசெய்து இந்தியாவின் ஆஸ்கர் பரிந்துரையாக அனுப்ப உள்ளது.

 

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் பிரிவிற்கு கடந்த ஆண்டு இந்திய அரசு சார்பில் ரன்வீர் சிங்கின் 'கல்லி பாய்' திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
yogi babu new movie update

இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகிபாபு நடிப்பில் ஒரு படம் உருவாகும் வருகிறது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், யோகி பாபு நாயகனாக நடிக்க லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஆர் ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. 

இப்படம் குறித்து யோகி பாபு கூறுகையில், “சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாவின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள் . அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாகும். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்" என்றார். 

Next Story

விஷாலுக்கு யோகிபாபு பரிசு

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

yogi babu gifted murugal idol to vishal

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் 25 நாளை கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. வினோத் குமார் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் கடந்து வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த படத்தின் இந்தி பதிப்பை வெளியிடுவதற்கு தணிக்கை குழு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக ஒரு பரபரப்பு புகாரை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் சிபிஐ தணிக்கை குழு அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது. 

 

இந்த படத்தை அடுத்து தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. 

 

அப்போது எம்.குமாரசக்கனாபுரம் ஊராட்சி மக்கள் விஷாலை சந்தித்து, குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக சொன்னார்கள். உடனே விஷால், பொதுமக்கள் முழுமையாகப் பயன்பெறும் வகையில் 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுத்தார். இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர். 

 

இந்த நிலையில் யோகிபாபு தனக்கு முருகன் சிலை ஒன்றை பரிசளித்துள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நடந்த படப்பிடிப்பின் போது யோகிபாபு தனக்கு அளித்துள்ளதாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கடவுளே பரிசைக் கொடுத்து அனுப்பியது போல் உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.