Skip to main content

மீண்டும் இணையும் மாதவன் - லிங்குசாமி கூட்டணி?

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

bdbdbdbd

 

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சண்டக்கோழி 2'. விமர்சன ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்த இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றிபெறத் தவறியது. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்த பின்னும், இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது. அவ்வப்போது ரசிகர்களும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பிவந்தனர். இந்த நிலையில், தனது அடுத்த படத்தின் பணிகளை சமீபத்தில் பூஜையுடன் தொடங்கினார் இயக்குநர் லிங்குசாமி. 

 

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கிறார். பிற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் மாதவனை படக்குழு அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதை மாதவனுக்கு பிடித்துப்போக, அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மாதவன் ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் ‘ரன்’, ‘வேட்டை’ படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆக்‌ஷன் ஹீரோவாக என்னை உருவாக்கிய படம்” - விஷால் நெகிழ்ச்சி

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
vishal about 18 years of sandakozhi

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சண்டக்கோழி. விக்ரம் கிருஷ்ணா தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்களைத் தாண்டி படத்தின் பிண்ணனி இசை இன்றளவும் பேசப்படுகிறது. மேலும் விஷால் கரியரில் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. 

இப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் கடக்கிறது. இதை முன்னிட்டு விஷால் அவரது எக்ஸ் பக்கத்தில், “18 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 16, 2005 அன்று வெள்ளித்திரையில் சண்டக்கோழி என்ற மாயாஜாலத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக என் வாழ்க்கையை உருவாக்கிய இந்த நாளில் நான் அனுபவிக்கும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 

என்னை நம்பிய என் பெற்றோர், என் இயக்குநர் லிங்கு (சாமி), அவர்களின் வரிசையில் மேலே உள்ள கடவுளுக்கும் (சாமி) நான் வணங்கி நன்றி கூறுகிறேன். இறுதியாக உலகளவில் பார்வையாளர்கள் வடிவில் திரையரங்குகளில் நான் பார்க்கும் கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். எனது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் எனது குரு அர்ஜுன் சார் ஆகியோரின் இந்த கனவை தொடருவேன். நன்றி மட்டும் போதாது என்பது எனக்குத் தெரியும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து வருகிறார்.

Next Story

“2015 வெள்ளத்தை நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்...” - லிங்குசாமி

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

lingusamy about cyclonemichaung

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில் லிங்குசாமி, தமிழ்நாடு அரசையும் சென்னை மாநகராட்சி ஊழியர்களையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த மூன்று நாட்களாக தஞ்சாவூரில் இருந்ததால், சென்னை வர விமானங்கள் இல்லை. சென்னை நிலவரத்தைப் பார்த்து கவலையடைந்தேன். நேற்றிரவு நான் திரும்பி வந்தபோது, அடையாறில் ஒருவரை ட்ராப் செய்ய போயிருந்தேன். விமான நிலையத்திலிருந்து அடையாறு மற்றும் வளசரவாக்கம் திரும்பும் அனைத்து வழிகளிலும், தமிழக அரசு, அதிகாரிகள், தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் எவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது” எனக் குறிப்பிட்டு சென்னை மாநகராட்சியை டேக் செய்திருந்தார். 

 

மேலும், “2015 வெள்ளத்தை நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். இது சரியான திசையில் முன்னேற்றம் என்று கூறலாம். தாழ்வான பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் இருந்து பலரை மீட்பதில் இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கம் இந்த செயல்முறையை விரைவுபடுத்தும் மற்றும் விரைவில் நகரத்தை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். இதற்கு என்னால் இயன்ற வழிகளில் நகர அதிகாரிகளுக்கு உதவ விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

இதனிடையே பார்த்திபன் மற்றும் தங்கர் பச்சான் ஆகியோரும் மிக்ஜாம் புயல் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். பார்த்திபன், “கட்சி பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் இவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இதுபோன்ற இடர் காலங்களில் அக்கம் பக்கம் உள்ள இளைஞர்கள், தாய்மை நிறைந்தவர்கள் ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகளே தண்ணீருக்கிடையில் தாகம் தீர்ப்பதாகும். அப்படிப்பட்ட ரியல் ஹீரோ/ ஹீரோயின் அனைவரின் பாதம் தொட்டு நன்றியுடன் வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

தங்கர் பச்சான், “மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதுதான் உண்மையான அரசியல் பணியாகும். இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலைமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான், உங்களை உயர்த்திவிடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றிக் கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டிருந்தனர்.