Skip to main content

“உங்கள் பெற்றோரை நினைத்து வருந்துகிறேன்...” - மாதவன் பதிலடி

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

madhavan

 

மலையாள படமான ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் அமேசான் ப்ரைமில் ‘மாறா’ என்ற தலைப்பில் வெளியாகிறது. ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுடன் நடித்த ஷரத்தா ஸ்ரீநாத் இந்த படத்திலும் அவருடன் நடிக்கிறார்.

 

பாலிவுட் நடிகர் அமித் சாத் என்பவர் மாதவனுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவில் ட்விட்டர் பயனர் ஒருவர் மாதவன் மதுவிற்கு அடிமையாகிவிட்டதாக தெரிவித்து கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்டில், “ஒரு காலத்தில் மாதவன் எனது இதயம் கவர்ந்த நடிகராக இருந்தார். ஆனால் இப்போது அவர் தன்னுடைய அற்புதமான சினிமா வாழ்க்கை, ஆரோக்கியம், வாழ்க்கை ஆகியவற்றை மது மற்றும் போதைப் பழக்கத்தால் அழித்துக்கொள்வதைப் பார்க்க நெருடலாக உள்ளது. பாலிவுட்டில் அவர் நுழைந்தபோது புதிதாக மலர்ந்த மலரைப் போல இருந்தார். ஆனால் இப்போது அவரது கண்களையும், முகத்தையும் பாருங்கள். அவை அனைத்தையும் சொல்லும்’ என்று கூறியிருந்தார்.

 

இந்தக் கமெண்டிற்கு மாதவனே பதிலளித்துள்ளார். அதில், ‘ஓ.. இவற்றையெல்லாம் நீங்கள் கண்டுபிடித்தீர்களா? உங்கள் பெற்றோரை நினைத்து நான் கவலை கொள்கிறேன். நீங்கள் மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாதவனுக்கு மத்திய அரசு கொடுத்த புதிய பதவி

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

madhavan appointed as FTII head

 

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் எனப் பல்வேறு மொழிகளில் பயணித்துள்ளார் நடிகர் மாதவன். கடந்த ஆண்டு இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற தலைப்பில் இயக்கியதோடு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். 

 

இப்படம் கடந்த வருடம் பிரான்சில் நடந்த உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு அளித்தனர். மேலும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டினர்.  

 

இதையடுத்து சமீபத்தில் 69வது தேசியத் திரைப்பட விருது அறிவிப்பில் சிறந்த படம் என்ற பிரிவில் 'ராக்கெட்ரி' படத்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவரது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

"மாஸ்டர்" - தி காஷ்மீர் ஃபைல்ஸ் பட இயக்குநரை புகழ்ந்த மாதவன்

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

madhavan appreciate Vivek Agnihotri

 

பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மைக் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் வந்த நிலையில், பெரும் சர்ச்சை உண்டானது. 

 

மேலும், கோவாவில் 53 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, அவ்விழாவின் தேர்வுக்குழு தலைவர் வெறுப்புணர்வைத் தூண்டுவதாக இருக்கிறது என விமர்சித்திருந்தார். இப்படி பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்திய இப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, தற்போது தி வேக்ஸின் வார் (The Vaccine War) என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் கோரோனோவிற்கு எதிரான இந்தியாவின் போரின் அடிப்படையிலும், உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க மருத்துவத் துறை எடுத்த முயற்சிகளின் அடிப்படையிலும் உருவாகியுள்ளதாக தெரிகிறது. 

 

இப்படம் அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அமெரிக்காவில் நேற்று திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்த மாதவன் பட இயக்குநரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி, மிகவும் சவாலான காலகட்டத்தில் தேசத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்த இந்திய விஞ்ஞான சமூகத்தின் அற்புதமான தியாகங்கள் மற்றும் சாதனைகள் வியப்படைய செய்தது. 

 

கதை சொல்லுவதில் மாஸ்டராக இருக்கும் விவேக் அக்னிஹோத்ரி இக்கதையை இயக்கியுள்ளார். அவர் உங்களை ஒரே நேரத்தில் உற்சாகப்படுத்தவும், கைதட்டவும், அழவும், மகிழ்ச்சியாகவும் ஆக்குபவர்" என குறிப்பிட்டு படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகளை பாராட்டினார். மேலும், "படத்தை கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பாருங்கள். லாக்டவுன் காலகட்டத்தில் நாம் உயிர்வாழ உதவிய பெண்களுக்காக டிக்கெட்டை வாங்குங்கள்" என குறிப்பிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)