Skip to main content

"நான் அந்த படத்தில் நடிக்கிறேனா..?" - நடிகர் மாதவன் பதில்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

gugufgug

 

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சண்டக்கோழி 2'. விமர்சன ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்த இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றிபெறத் தவறியது. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்த பின்னும், இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், தனது அடுத்த படத்தின் பணிகளை சமீபத்தில் பூஜையுடன் தொடங்கினார் இயக்குநர் லிங்குசாமி. 

 

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க உள்ளார். ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கும் இப்படத்தில் பங்குபெறும் பிற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிகர் மாதவன் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து நடிகர் மாதவன் ட்வீட் செய்துள்ளார். அதில்...

 

"நானும் இயக்குநர் லிங்குசாமியுடன் மீண்டும் வேலை செய்யவே விரும்புகிறேன். அப்படி நாங்கள் இணையும் பட்சத்தில் ஒரு மேஜிக் மீண்டும் உருவாகும். அவர் அற்புதமான, அன்பான மனிதர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நான் வில்லனாக நடிக்கிறேன் என்று சமீபமாக உலா வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை" என கூறியுள்ளார். மாதவன் ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் ‘ரன்’, ‘வேட்டை’ ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்