Skip to main content

”வெற்றிமாறன் அலுவலகத்தில் என்னை திட்டமிட்டு அவமானப்படுத்தினார்கள்” - கவிஞர் கண்ணதாசன் மகன் வேதனை

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

Gopi Kannadasan

 

நடிப்பு, ஒளிப்பதிவு, சட்டம், அரசியல் எனப் பல துறைகளில் இயங்கி வருபவரும் கவிஞர் கண்ணதாசனின் மகனுமான கோபி கண்ணதாசனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சமீபத்தில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், வெற்றிமாறனுடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

வெற்றிமாறன் அலுவலகத்தில் எனக்கு ஏன் அப்படி நடந்தது என்று இன்றுவரை தெரியவில்லை. உன்னை அழைத்து அவமானப்படுத்தி அனுப்புவோம் என்று திட்டமிட்டு செய்தது மாதிரிதான் இது இருக்கிறது. ’சார் உங்கள பார்க்கணும்னு சொல்றாரு’ என்று அவர் ஆபிஸில் இருந்து போன் வரும். நான் உடனே கிளம்பிப்போவேன். ஒன்பது முறை அதுபோல சென்றிருக்கிறேன். அங்கே போனவுடன் அவரது உதவியாளர்கள் என்னை உள்ளே அனுப்புவார்கள். உள்ளே வெற்றிமாறன், என்னை அப்படியே பார்ப்பார். ’சரி... சொல்லி அனுப்புகிறேன்’ என்பார். ஒருமுறை போலீஸ் உடையணிந்து நடித்துக்காட்டினேன். அவருக்கும் அது பிடித்திருந்தது. என்னிடம் தேதியெல்லாம் சொல்லிவிட்டு தயாராக இருங்கள் என்றார்.

 

அதன் பிறகு ஒருநாள், ’சார் உங்கள பார்க்கணுமாம்’ என்று சொன்னார்கள். அன்று அவர்களே காரும் அனுப்பியிருந்தார்கள். எனக்கு ஒரே குழப்பம். எப்போதும் நம் காரில்தானே செல்வோம். இப்போது ஏன் கார் அனுப்பியிருக்கிறார்கள் என யோசித்துக்கொண்டே காரில் ஏறினேன். கார் நேராக ஒரு ஷூடட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றது. ஒரு அரைப்பக்க வசனத்தை கொடுத்து நடிக்கச் சொன்னார்கள். உடனடியாக மனப்பாடம் செய்து நடித்ததால் பாதியிலேயே தடங்கல் ஏற்படுகிறது. ஒருவித கடுப்புடன் பிரேக் சொல்லிவிட்டு வெற்றிமாறன் கிளம்பிவிடுகிறார்.

 

கொஞ்ச நேரத்தில் ப்ரொடக்‌ஷன் மேனேஜர் அழைத்து, ஒரு சின்ன தொகையை கையில் கொடுக்கிறார். பின்னர், நான் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன். இப்படி ஒரு சம்பவம் ஏன் நடந்தது என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. இதில் நான் எதையும் வெட்டவுமில்லை; சேர்த்து மிகைப்படுத்தவும் இல்லை. நடந்ததை அப்படியே கூறுகிறேன். 25 படங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்துவிட்டேன். எந்தப் படத்திலும் அவமானப்படவில்லை. இது என் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத கசப்பான அனுபவம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.