Skip to main content

'கலைப்புலி' தாணுவின் தயாரிப்பில் அடுத்த துப்பாக்கி! 

Published on 16/09/2018 | Edited on 16/09/2018

கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்போது வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்துள்ள 'துப்பாக்கி முனை' விரைவில் வெளிவர இருக்கிறது.
 

thuppaki munai vikram prabhu



'ஆளவந்தான்', 'காக்க காக்க', 'தொட்டி ஜெயா', 'துப்பாக்கி', 'தெறி' என தாணு தயாரித்த ஆக்ஷன் படங்களின் வெற்றி வரிசை பலமானதுதான். சமீபத்தில் இதற்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட தயாரிப்பாக '60 வயது மாநிறம்' திரைப்படத்தை தயாரித்திருந்தது வி கிரியேஷன்ஸ். அனைவராலும் பாராட்டப்பட்ட அந்தப் படத்திலும் விக்ரம் பிரபுதான் கதை நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

thuppaki munai



தனது சினிமா பயணத்தைத் தொடர் வெற்றிகளுடன் துவங்கிய விக்ரம் பிரபுவின் கிராஃப் சிறிது காலம் தொய்வடைந்தயிருந்தது. இன்று வெளியாகியுள்ள 'துப்பாக்கி முனை' டீசர் படத்தின் மீது எதிர்பார்ப்பை உண்டாக்குவதாக இருக்கிறது. முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள படத்தில் விக்ரம் பிரபு இதுவரையில்லாத புதிய தோற்றத்தில் ஸ்டைலாக இருக்கிறார். ஹன்சிகா, எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு இயக்கிய 'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல' திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. வெளிவரவுள்ள துப்பாக்கி முனை தனக்கு வர்த்தக ரீதியாகவும் வெற்றியைக் கொடுக்கும் என்று நம்பிக்கையோடுள்ளார் இயக்குனர். ராசாமதி ஒளிப்பதிவு செய்ய எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸுடன் இணைந்து தயாரித்துள்ளது ACS பென்ஸ் மீடியா நிறுவனம்.        
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இந்தக் கெட்ட கனவு முடிவுக்கு வர வேண்டும்'' - ஹன்சிகா இரங்கல்!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

sgs

 

கரோனா பாதிப்பு நெருக்கடிக்கு இடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை 'அம்பன்' புயலாக மாறி முதலில் தமிழகத்தை நோக்கி வரலாம் எனக் கணிக்கப்பட்டது.
 


பிறகு இந்தப் புயல் வடமேற்கு திசை நோக்கி மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது 155 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. மேலும் புயலுக்கு இதுவரை 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இதற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி அம்பன் புயல் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், அம்பன் புயல் மேற்கு வங்காளத்தின் பல மாவட்டங்களில் சிதைவுகள் மற்றும் அழிவுகளின் பாதையை விட்டுச் சென்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்காக என் இதயம் வெளியே செல்கிறது. இந்தக் கெட்ட கனவு முடிவுக்கு வர வேண்டும்! கொல்கத்தா மற்றும் ஒடிஷாவுக்கான என் பிரார்த்தனைகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

ஏப்ரல் 14ஆம் தேதி களமிறங்கும் சரவணன் அருள் படம்?

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

லெஜண்ட் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்தது செம வைரலானது. 
 

sarvanan arul

 

சமூக வலைதளத்தில் அவருடைய விளம்பரங்கள் மீம்ஸ், வீடியோஸ் என்று பல கோணங்களில் பரவியது. பலர் அவருடைய வீடியோக்களை கலாய்த்தாலும், சிலர் அவருடைய கடை அவரே அதற்கு புரோமோஷன் தருகிறார் இதில் என்ன இருக்கிறது என்று தெரிவித்தனர். இவர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிப்பது பெருகி கொண்டே போனது. 
 

இந்நிலையில் இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை, அதனால்தான் இவர் இவ்வாறு செய்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. படத்தில் நடிப்பதற்கு கதைகளும் கேட்டு வருகிறார் என்று செய்திகள் வெளியாகின. தற்போது உல்லாசம் படத்தை இயக்கிய ஜுடி-ஜெர்ரி இயக்கும் படத்தில் இவர் ஹீரோவாக நடிப்பதாகவும் பெரிய முன்னணி ஹீரோயின் ஒருவரை நடிக்க ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. 
 

கமர்ஷியல் மற்றுமின்றி படத்தில் கருத்தும் இருக்க வேண்டும் என்று சரவணன் அருள் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கி அடுத்த வருட ஏப்ரல் 14ல் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.