Skip to main content

'யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்...' மிரட்டும் 'காடன்' ட்ரைலர்!

Published on 03/03/2021 | Edited on 04/03/2021

 

Rana Daggubati

 

பிரபுசாலமன் இயக்கத்தில், நடிகர் ராணா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. மூன்று மொழிகளிலும் நடிகர் ராணாவே கதாநாயகனாக நடித்துள்ளார்.

 

ad

 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததையடுத்து, 2020-ம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி 'காடன்' வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. கரோனா நெருக்கடி காரணமாக மார்ச் மாதமே இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. 

 

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு இயல்புநிலை திரும்புவதால், 'காடன்' திரைப்படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்த இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராணா, மஞ்சு... நீளும் பட்டியல்; அடுத்தடுத்து வெளியாகும் ரஜினி பட அறிவிப்புகள்

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

Rana Daggubati on board for Thalaivar170

 

நெல்சன் இயக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தில் கெளரவ கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்க, முதன்மை கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில், லைகா நிறுவனம் தயாரித்து வரும் லால் சலாம் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதனிடையே ரஜினிகாந்த் ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் உருவாக்கவுள்ள தனது 170 வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை படக்குழு  தற்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி ஆகியோர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

மல்டி ஸ்டாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இப்படத்தைத் தொடர்ந்து சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ரஜினி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

நடிகர் ராணா டகுபதி தொடர்பான வழக்கு; விசாரணை நடத்தாததால் நீதிமன்றத்தை நாடிய மனுதாரர்

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Actor Rana Daggubati land grabbing case Petitioner approached court due to lack of investigation

 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா டகுபதி, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் தமிழில் ஆரம்பம், பெங்களூரு நாட்கள், காடன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

 

இந்த சூழலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரமோத் குமார் என்ற தொழிலதிபர் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில், ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள தனது நிலத்தை காலி செய்ய வற்புறுத்தியதாகவும் ரவுடிகளைக் கொண்டு தன்னைத் தாக்கிக் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் ராணா மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு மீது கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளார். 

 

இது தொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனக் கூறி, நாம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதன் அடிப்படையில் ராணா, சுரேஷ்பாபு உள்ளிட்ட சிலர் மீது நாம்பள்ளி நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் ராணா மற்றும் சுரேஷ் பாபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.