Skip to main content

"90 சதவிகித பெண்கள் வாழும் வாழ்க்கையை இந்தப் படத்தில் பிரதிபலித்துள்ளேன்..." - நடிகை ஜோதிகா பேச்சு!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

Jyothika

 

இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள உடன் பிறப்பே திரைப்படம் அக்டோபர் 14ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ட்ரைலர் ஒரே இரவில் 30 லட்சம் பார்வைகளை யூடியூப் தளத்தில் கடந்துள்ளது.

 

காணொளி வாயிலாக நேற்று நடைபெற்ற ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா பேசுகையில், "எனது குருநாதர்கள் பிரியதர்ஷன் சார் மற்றும் வசந்த் சார் இருவருக்கும் நன்றி. எனக்கு தெரிந்த அனைத்துமே இருவரிடமும் கற்றுக்கொண்டதுதான். என்னுடைய கணவர் சூர்யாவுக்கும் நன்றி. அவர் இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை. அவர்தான் என்னுடைய பெரிய பலம். எனது திரைப்பயணம் மிகவும் எளிமையானது. ஆரம்பத்தில் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

 

என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில்தான் நிறைய கற்றுக்கொண்டேன். எனது திரைப் பயணத்தில் இதுதான் முக்கியமானது. புது இயக்குநர்கள், புது கதைகள் என கடந்த 8 ஆண்டுகள் மிகவும் அழகானது. பெண்கள், குடும்பத்தினர் அனைவருமே பெருமைப்படும்படியான படங்களில் நடிக்க விரும்புகிறேன். 'உடன்பிறப்பே' என்னுடைய 50ஆவது படம். இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இதுவரை நடித்த படங்கள் அனைத்திலுமே நிறைய பேசியிருப்பேன். ஆனால், பெண்களின் உண்மையான வலிமையை இந்தப் படத்தில்தான் பிரதிபலித்துள்ளேன். பெண்களின் மிகப்பெரிய பலம் என்பது அமைதிதான். 90% பெண்கள் இந்த மாதிரியான வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்.

 

பேசுவது என்பது மிகவும் எளிது. அமைதியில் ஒரு வலிமை இருக்கிறது. இதுவரை நான் நடித்த படங்களிலேயே ரொம்ப அழகான கதாபாத்திரம் இது. கிராமத்து பெண்ணாக நான் நடிக்க முடியும் என நம்பிய இரா.சரவணன் சாருக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் துணையே, என் பலமே...” - சூர்யா பெருமிதம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
suriya wishes on jyotika Shaitaan movie release

தமிழை தாண்டி மற்ற மொழி படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஜோதிகா. அந்த வகையில் மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் - தி கோர் படத்தில் நடித்திருந்தார். கடந்த வருட நவம்பரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் 'ஸ்ரீ' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. மே 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

இதனிடையே விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள சைத்தான் படத்தில் நடித்துள்ளார். இதில் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோரோடு இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். பனோரமா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. நேற்று நடந்த இப்பட ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஜோதிகாவுடன் கலந்து கொண்டார். இப்படம் மகளிர் தினமான இன்று வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் ஜோதிகாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “என்னவளே... என் துணையே, என் பலமே. சைத்தான் படம் மூலம் மீண்டும் உன்னுடைய புதிய பயணத்தை தொடங்குகிறாய். நீ செய்யும் அனைத்திலும் நான் பெருமை கொள்கிறேன். நிறைய அன்பும் மரியாதையும்” என குறிப்பிட்டுள்ளார். இந்தியில் ஜோதிகா நடிப்பில் 'டோலி சஜா கே ரக்கீனா' மற்றும் 'லிட்டில் ஜான்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. அதை தொடர்ந்து 23 வருடங்கள் கழித்து இந்தியில் சைத்தான் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.