Skip to main content

கரோனா தடுப்பூசி... வேண்டுகோள் விடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

harris jeyaraj

 

கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வேகமெடுக்கத் தொடங்கிய கரோனா பரவல் கடந்த சில மாதங்களாகக் கட்டுக்குள் இருந்தது. இதனையடுத்து, மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது.

 

இதற்கிடையே, தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தொடங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எனப் பலரும் தடுப்பூசி செலுத்திய கையோடு, தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி பொதுமக்களையும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ், சமீபத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், 'தாமதிக்காமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வைப் மோடில் கீர்த்தி சுரேஷ் & கௌதம் மேனன்

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

heerthy suresh gautham menon vibe for ajith song in harris jayaraj concert

 

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் 'துருவ நட்சத்திரம்' மற்றும் எம். ராஜேஷ் மற்றும் ஜெயம் ரவியின் 'பிரதர்' உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில் துருவ நட்சத்திரம் படம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பிரதர் படம் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

திரைப்படங்களைத் தாண்டி அவ்வப்போது இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஹாரிஸ் ஜெயராஜ், நேற்று சென்னையில் 'ராக் ஆன் ஹாரிஸ்' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை 'நாய்ஸ் அன்ட் க்ரைன்ஸ்' (Noise and Grains) என்ற நிறுவனம் மேற்கொண்டது. 

 

கடந்த மாதம் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில், ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டு பெரும் சர்ச்சையானதால் ஹாரிஸ் ஜெயராஜ் நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கப்பட்டது. இசை நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சரியான இருக்கைகள், பார்க்கிங் வசதி உள்ளிட்ட விஷயங்களை இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. 

 

சென்னையில் உள்ள நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். ரசிகர்களுடன் திரை பிரபலங்களாகிய கீர்த்தி சுரேஷ், கெளதம் மேனன், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கண்டு களித்தனர். அப்போது கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'அதாரு அதாரு...' பாடல் பாடப்பட்ட போது ரசிகர்களுடன் கீர்த்தி சுரேஷும், கெளதம் மேனனும் நடனமாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

 

Next Story

ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி; படையெடுக்கும் ரசிகர்கள் 

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Concert by Harris Jayaraj; Invading fans

 

நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நடத்தும் இசை நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

 

அண்மையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் நிகழ்ச்சியில் நிகழ்ந்த குளறுபடிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்குப் பல்வேறு நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கப்பட்டது. இசை நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சரியான இருக்கைகள், பார்க்கிங் வசதி உள்ளிட்ட விஷயங்களை இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதலாக டிக்கெட் விற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை 'நாய்ஸ் அன்ட் க்ரைன்ஸ்' (Noise and Grains) என்ற நிறுவனம் செய்கிறது. இன்னும் சற்று நேரத்தில் இசை நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்கள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் குவிந்து வருகின்றனர். இதற்காக 5000 கார்கள், 10,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.