Skip to main content

நவரசாவில் ஆச்சரியப்படுத்தும் பெண் கதாபாத்திரங்கள்!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021
gbdsghsr

 

தமிழ்த் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சரியம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கியூப் சினிமா டெக்னாலஜீஸ் இணைந்து தயாரித்துள்ளன. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர், தற்போது வெளியாகி வைரலாகிவரும் நிலையில், இந்த ஆந்தாலஜி படத்தில் 9 வித்தியாசமான கதைக்களங்களுள் இதுவரை பார்த்திராத கோணத்தில் பெண் கதாபாத்திரங்கள் ஆச்சரியப்படும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை பின் வருமாறு...

 

எதிரி (கருணை) கதையில் ரேவதி கதாபாத்திரமான "சாவித்திரி"

 

"சாவித்திரி" பாத்திரம் ஒவ்வொரு காட்சியிலும் முதிர்வு பெற்று காட்சிக்குக் காட்சி மாறிக்கொண்டிருக்கும், ரசிகர்கள் பார்க்க ஏங்கும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். சாவித்திரி ஒரு மங்களகரமான பக்தி கொண்ட பெண் கதாபாத்திரம். படத்தில் துக்கத்திற்கும் அறத்திற்கும் இடையில்  தவித்து, சரியான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு பாத்திரம் ஆகும். 

 

இண்மை (பயம்) கதையில் பார்வதி கதாபாத்திரமான "வஹிதா'

 

நடிகை பார்வதி இந்திய சினிமாவில் பல மாறுபட்ட துணிச்சலான பாத்திரங்களில் நடித்ததன் மூலம், உலக அளவில் புகழைக் குவித்தவர். இப்படத்தில் ஒரு எளிமையான குடும்பத்திலிருந்து வந்து, பணத்திற்காகவும் சொத்திற்காகவும், வயதான பணக்காரரைத் திருமணம் செய்து கொண்ட பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது வாழ்க்கையைச் சுற்றியுள்ள பல உண்மைகளை தெரிந்து கொள்ளும்போது, வாழ்க்கை அவரது செயல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. 

 

கிடார் கம்பி மேலே நின்று (காதல்) கதையில் ப்ரயகா ரோஸ் மார்டின் கதாபாத்திரமான “நேத்ரா” 

 

நேத்ரா ஒரு மிகச்சிறந்த பாடகி. நவநாகரீக பெண். தனக்குச் சரியெனப் பட்டதைத் துணிந்து செய்யும் கதாபாத்திரம். தனக்கு வேண்டியதைத் தேடி அடையும் பெண். சுதந்திரமாக இயங்கும் அனைவரும் விரும்பும் நவீனம் பெண்.

 

பாயாசம் (வெறுப்பு) கதையில் அதிதி பாலன் கதாபாத்திரமான "பாக்யலட்சுமி"

 

மிக இளம் வயதில் விதவையானதால், சமூகம் அவளிடம் பாரபட்சம் காட்டும் நடவடிக்கைகளால், மனதளவில் அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண். அவள் நேர்மறை எண்ணங்களால், அவள் முன் உள்ள தடைகளைக் கடந்து, நம் அனைவருக்கும் முன்னுதாரண பெண்ணாக, நம் கண்களில் நீர் பொங்கும் கடின வாழ்க்கையைக் கடந்து, சாதித்துக் காட்டும் "பாக்யலட்சுமி" கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்துள்ளார்.

 

பாயாசம் (வெறுப்பு) கதையில் ரோகிணி  கதாபாத்திரமான "வாலம்பா"

 

இறந்த முதிய கணவனான சமந்து உடைய மனைவி கதாபாத்திரம் தான் வாலம்பா. அறத்தின் நெறியில் நின்று வாழும் பெண். சரி தவறுகளை தன் வாழ்வில் தான் நம்பும் அறத்தின் வழி முடிவு செய்யும் பெண். இந்த கதாபாத்திரத்தில் ரோகிணி நடித்துள்ளார்.

 

ரௌத்திரம் (கோபம்) கதையில் ரித்விகா கதாபாத்திரமான "அன்புக்கரசி"

 

பா.ரஞ்சித்தின் மெட்ராஸ்  படத்தில் அட்டகாச நடிப்பைத் தந்த ரித்விகா, இக்கதையில் "அன்புக்கரசி" பாத்திரத்தில் நடித்துள்ளார். முற்போக்கு எண்ணம் கொண்ட படித்த பெண்ணாக, தன் வாழ்வில் உயர் சாதனைகளை நோக்கிப் பயணப்படும் பெண் கதாபாத்திரத்தில், அருளின் சகோதரியாக நடித்துள்ளார்

 

துணிந்த பின் (தைரியம்) கதையில் அஞ்சலி கதாபாத்திரமான “முத்துலட்சுமி”

 

தான் ஏற்கும் கதாபாத்திரங்களில், ஒவ்வொன்றிலும் மிகச்சிறப்பான நடிப்பைத் தரும் அஞ்சலி, தொலைந்து போன வெற்றியின் காதல் மனைவியாக நடித்துள்ளார். தனது காதல் கணவனின் வருகைக்காக ஏங்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

சம்மர் ஆஃப்  92 (நகைச்சுவை) கதையில் ரம்யா நம்பீசன்  கதாபாத்திரமான “லக்ஷ்மி”

 

குழந்தை நட்சத்திரமாக இருந்து 60 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை) கதையில் ஒரு ஆசிரியராக மிகச்சிறந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். தனது மாணவர்களின் நன்மைக்காக உழைக்கும் அன்பான ஆசிரியராகவும், நாய்களின் காதலராகவும் நடித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நான் எப்படி இயக்குநராக மாறினேன் தெரியுமா..? - காரணம் பகிரும் நடிகர் அரவிந்த் சாமி

Published on 11/08/2021 | Edited on 11/08/2021
fxbxfbdf

 

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில், தமிழில் வெளியாகியுள்ள "நவரசா" ஆந்தாலஜி தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மனிதர்களின் அடிப்படை உணர்வுகளான 9 ரசங்களின் அடிப்படையில் 9 குறுங்கதைகள் இதில் வெளிவந்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் அரவிந்த்சாமி, முதல் முறையாக இந்த ஆந்தாலஜி மூலம், இயக்குநராக மாறியுள்ளார். கோபத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள "ரௌத்திரம்" பகுதியை அவர்  இயக்கியுள்ளார். "ரௌத்திரம்" பார்வையாளர்களிடம் பாராட்டுகளைக் குவித்து வரும் நிலையில் தனது அறிமுக இயக்கம் குறித்து, நடிகர், இயக்குநர் அரவிந்த்சாமி  கூறியபோது...

 

"90களின் ஆரம்பத்தில் இருந்தே இயக்கத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது. மணி சார் 'நவரசா' குறித்து என்னுடன் பேசியபோது, நான் அதில் பங்கேற்க முடியுமா எனக் கேட்டேன். நான் அவரிடம் இயக்குநராகவா அல்லது நடிகராகவா எனக் கேள்வி எழுப்பினேன். அது உன்னுடைய தேர்வு தான் என்று கூறிவிட்டார். இப்படித்தான் இயக்குநராக எனது பயணம் துவங்கியது. இயக்குநராக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். படைப்பை உருவாக்குவதில் எதைப் பற்றியும் எந்த சந்தேகமோ, தயக்கமோ, என்னிடம் சுத்தமாக இல்லை. பல ஆண்டுகளாக நான் பல திறமையான இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிந்ததது தான் அதற்கு காரணம். 

 

அவர்கள்தான் என் வழிகாட்டி. ஏதாவது செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் எப்பொழுதும் அது குறித்து, கவனித்துக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மற்றும் அதற்கான வாய்ப்பு வரும்போது, தயங்காமல் ஏற்றுக்கொண்டு செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் இப்படைப்பை உருவாக்கியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆந்தாலஜியில் கோபத்தை நான் தான் தேர்ந்தெடுத்தேன் அதற்கு காரணம் வழக்கத்தை மீறி ஏதாவது செய்ய, கோபம் ஏற்றதாக இருக்குமென்று நினைத்தேன். ஒரு ஐடியா என்னுள் தோன்றியது. கோபம் கிடைத்தால், அதை முன்வைத்து ஒரு கதையைக் கூறலாம் என்று முடிவு செய்தேன். அது நிறைவுபெற்று, இப்போது எனது படைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவது, மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது" என்றார்.   
 

 

Next Story

''‘நவரசா’ திரைக்கதையில் விஜய் சேதுபதி பெயரையும் இணைத்துள்ளேன்'' - பிரபல இயக்குநர் தகவல்!

Published on 05/08/2021 | Edited on 01/09/2021

 

hrehrdhrde

 

தமிழ்த் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சரியம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் க்யூப் சினிமா டெக்னாலஜீஸ் இணைந்து தயாரித்துள்ளன. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர், சமீபத்தில் வெளியாகி வைரலாகிவரும் நிலையில், இந்த ஆந்தாலஜி படத்தில் கருணை உணர்வை மையமாக வைத்து உருவாகிய ‘எதிரி’ படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பெஜோய் நம்பியார். விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குநர் பெஜோய் நம்பியார் பேசியபோது...

 

"மக்ரந்த் தேஷ்பாண்டே ஒருமுறை என்னிடம் மிக முக்கியமான ஒன்றைக் கூறினார். ‘நீங்கள் விரும்பும், குருவாக மதிக்கும், ஆளுமையுடன் பணிபுரியும்போது கவனமாக இருங்கள். நீங்கள் அவரைப் பார்த்து வளர்ந்திருப்பதால், அவர்களுடன் பணிபுரிவது சில சமயங்களில் அவர்களின் மகத்துவத்தை, அவர்கள் மீதான உங்களின் கற்பனை பிம்பத்தை அழித்துவிடும். ஆதலால் அம்மாதிரி வாய்ப்புகளைத் தவிர்ப்பது நல்லது’ என்றார். ஆனால் என் விஷயத்தில் அது நடைபெறவில்லை. இளமையில் நான் பார்த்து பிரமித்த, மணி சாருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது  எனது பாக்கியம். அவருடன் பணிபுரிந்தபோது அவர் மீதான பிரமிப்பு அதிகரிக்கவே செய்தது. வாழ்நாளின் பொன் தருணங்கள் அவை. 

 

hrehrehe

 

இப்படத்தில் பல காட்சிகளுக்காக, நானும் விஜய் சேதுபதியும் ஒன்றாக அமர்ந்து விவாதித்து, உரையாடல்களை மீண்டும் எழுதினோம். நடிகர்கள் தங்கள் நடிப்பில் தங்களை எந்தளவு ஈடுபடுத்திக்கொள்கிறார்கள் என்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. விஜய் சேதுபதி அவரது காட்சிகள் மட்டுமின்றி மொத்த படத்தையும் மேம்படுத்தினார். உதாரணமாக நடிகை ரேவதி அவர்களின் இறுதி வசனத்தை விஜய் சேதுபதிதான் எழுதினார். திரைக்கதையில் அவரது பங்களிப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது. டைட்டில் கார்டில், திரைக்கதையில் அவரது பெயரையும் இணைத்துள்ளேன். இப்படத்தை உருவாக்க, என்னுடன் உண்மையாக ஒத்துழைத்த, அர்ப்பணிப்புள்ள நடிகர்களைப் பெற்றது எனது அதிர்ஷ்டம்" என்றார்.