Skip to main content

'இதுதான் 100% சரியான தருணம், வா தலைவா!' - அஜித்தை அரசியலுக்கு அழைத்த இயக்குனர், கிளம்பிய சர்ச்சை 

Published on 17/03/2019 | Edited on 17/03/2019

நாடாளுமன்ற தேர்தலின் பரபரப்பு, நாடெங்கும் பற்றிக்கொண்டது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகின்றன. சினிமாவிலிருந்து அரசியலுக்கு லேட்டஸ்ட்டாக வந்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வேளைகளில் பிஸி. வருவேன் என்று சொல்லிவரும் ரஜினிகாந்த், விஜய் இருவரும் பட வேலைகளில் பிஸி. இப்படியிருக்கும் சூழ்நிலையில், அரசியல் பற்றி எதுவுமே பேசாத அஜித்தை அரசியலுக்கு அழைத்து சமூக ஊடகங்களில் பரபரப்பை கிளப்பியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

 

suseenthiran director



தமிழ் நடிகர்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் முக்கியமான ஒருவர் அஜித். சமீபத்தில் இவர் நடித்து பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அஜித் ரசிகர்கள் சமீபத்தில்தான் அதன் 50வது நாளைக் கொண்டாடி குதூகலத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இயக்குனர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'வறுமையை உணர்ந்தவனால் மட்டுமே மக்களின் தலைவனாக முடியும்' என்று  கையெழுத்தால் காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

 

suseenthiran tweet

 

susee tweet



பிறகு சற்று நேரம் கழித்து, 'அஜித்குமார் அண்ணனின் ரசிகர்களுக்கு 10.30PM  today' என்று எழுதப்பட்ட இன்னொரு புகைப்படத்தை வெளியிட்டார். இந்த ட்வீட் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ஆர்வலர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பின்னர் இரவு 10.30 மணிக்கு கீழே உள்ள புகைப்படத்தை ட்வீட் செய்தார்.

 

suseenthiran tweet



அவர் செய்த ட்வீட், சோசியல் மீடியாவில் சர்ச்சையை உண்டாக்கியது. இதனை ஆதரித்தும் விமர்சனம் செய்தும் பலர் கமெண்ட் செய்தார்கள். அஜித் ரசிகர்களில் சிலர் இதை ஆதரித்தாலும், இன்னொரு சாரார் 'அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்' என்றொரு ஹேஷ்டேகை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். இயக்குனர் சுசீந்திரன், 'வெண்ணிலா கபடிக் குழு', 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு', 'ஜீவா' என பல வெற்றிப்படங்களை இயக்கியவர். இவர் தற்போது 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தில் நடித்து முடித்து 'கென்னடி க்ளப்' படத்தை இயக்கி வருகிறார். இவரது படங்களில் சமூக கருத்துகள் இருக்கும். 'வெண்ணிலா கபடிக் குழு'வில் கிராமத்து சாதிப் பிரிவினைகளைப் பேசிய இவர், 'ஜீவா' படத்தில் கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலை பேசினார். 'மாவீரன் கிட்டு', சாதிக் கொடுமைகளை இன்னும் வெளிப்படையாகப் பேசிய படம்.

சுசீந்திரன், இதற்கு முன்பே ஒரு பேட்டியில் 'கமல் சார், அஜித் சார் போன்றவர்கள் அரசியலில் இருக்க வேண்டும்' என்றும் இன்னொரு முறை 'அஜித் போன்றவர்கள் முதல்வராக வேண்டும்' என்றும் கூறியிருந்தார். தற்போது அஜித்தைக் குறிப்பிட்டு அவரை நேரடியாக அரசியலுக்கு அழைத்துள்ளார் சுசீந்திரன். கடந்த ஜனவரி மாதம், திருப்பூரில் நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்ததாகக் கூறப்பட்டது. அவ்விழாவில் கலந்துகொண்ட தமிழிசை சௌந்தரராஜன், அஜித்தைப் பாராட்டியும் அரசியலுக்கு வந்தால் நல்லது என்பது போலவும் குறிப்பிட்டு பேசியிருந்தார். அடுத்த நாளே அஜித்தின் சார்பாக, தான் எந்த கட்சியிலும் இல்லையென்றும் எந்தக் கட்சிக்கும் தனது ஆதரவு இல்லையென்றும் தனது ரசிகர்கள் ஆழ்ந்து சிந்தித்து தங்கள் விருப்பப்படி அரசியல் செயல்பாடுகளை வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறி ஒரு அறிக்கை வெளியானது.

தற்போது இயக்குனர் சுசீந்திரன் அஜித்தை அழைத்திருக்கிறார். அதுவும் 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கூறி அழைத்திருக்கிறார். பதில் வருகிறதா பார்ப்போம்.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை'- மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 'Treatment given to Ajith' - manager Suresh Chandra explains

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவல் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.