Skip to main content

”அந்தக் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்” - திண்டுக்கல் லியோனி கலகல பேச்சு

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

dindigul Leoni

 

'கிருமி' பட இயக்குநரான அனுசரண் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன், ராமர், தங்கதுரை, திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பன்னிக்குட்டி திரைப்படம் ஜூலை 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் பேசிய திண்டுக்கல் லியோனி, “பன்னிக்குட்டி படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படம், தற்போது ரிலீஸாக இருக்கிறது. 21 வருஷத்திற்கு முன்பாக கங்கா கௌரி என்ற  படத்தில் நடித்தேன். அதன் பிறகு எத்தனையோ பட வாய்ப்புகள் வந்தது. சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மாமனாராக நடிக்கக்கூட வாய்ப்பு வந்தது. அப்போது பள்ளியில் நான் ஆசிரியராக இருந்த காரணத்தால் என்னால் நடிக்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய அனுசரணுக்கு நன்றி. 

 

இயக்குநர் என்னிடம் கதை சொல்லவந்தபோது ஒரு சாமியார் கேரக்டரை சொல்லி உங்களுக்காகவே இந்தக் கேரக்டரை டிசைன் பண்ணேன் என்று சொன்னார். சாமியார்களைப் பற்றி பட்டிமன்றங்களில் நான் நிறைய பேசியிருக்கிறேன். ஒருமுறை பட்டிமன்ற மேடையில் வைத்து விவேகானந்தாவிற்கும் நித்தியானந்தாவிற்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு பேச்சாளர் என்னிடம் கேட்டார். அந்தக் கேள்விக்கு ஒரு நடுவராக நான் எப்படி பதில் சொல்ல முடியும். விவேகானந்தர் மிகப்பெரிய லெஜண்ட். நித்தியானந்தா எப்படி என்று உங்களுக்கே தெரியும். இந்தக் கேள்விக்கு நான் எப்படி பதில் சொன்னாலும் மாட்டிக்கொள்வேன்.

 

பின்னர் யோசித்து விவேகானந்தர் தன்னுடைய சீடர்களால் பிரபலமானார். நித்தியானந்தா சிடிக்களால் பிரபலமானார் என்று சொன்னேன். அங்கிருந்த அனைவருமே கைத்தட்டி சிரித்தனர். இதுபோல சாமியார்களில் பல வகைகள் உள்ளன. இந்தப் படத்தில் வித்தியாசமான சாமியார் கேரக்டரை இயக்குநர் எனக்கு கொடுத்துள்ளார். படத்தில் ராமர், தங்கதுரை, கருணாகரன் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தில் நான் நடித்தபோது பள்ளி ஆசிரியராகவும், திமுகவின் பேச்சாளராகவும், கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்தேன். ஆனால், படம் ரிலீஸாகும்போது தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக அரசாங்கப் பொறுப்பில் இருக்கிறேன். படத்தில் என் பெயர் போடும்போது அதை சேர்த்து போடுங்கள்.  தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரே சினிமாவை மதித்து நடித்திருக்கிறார் என்று நினைத்து சினிமா என்ற தொழில் மீது மக்களுக்கு இன்னும் மரியாதை கூடும்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மனித சமுதாயத்திற்கே பெரும் இழப்பு” - லியோனி வருத்தம்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
vijayakanth passes away “A great loss to the human community” – Leonie

திரைப்பட நடிகரும், தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான விஜயகாந்த், மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இன்று (28.12.23) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். விஜயகாந்த் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி நம்மிடம் விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது; “விஜயகாந்த் ஒரு அரசியல் தலைவர், திரைப்பட நடிகர் என்பதையெல்லாம் மீறி நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர். அவரின் மனிதத் தன்மையின் காரணமாகவே, இன்று அரசியல் கட்சியையெல்லாம் தாண்டி அனைவரும் அவரின் மரணத்திற்கு வேதனையுடன் இருக்கிறோம். தன் வீட்டிற்கு தேடி வருபவர்கள் தன் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பதையெல்லாம் பார்க்காமல், அவர்கள் சாப்பிட்டார்களா, அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் பிரச்சனை என்ன என்பதை கவனிப்பவர். அவ்வளவு இரக்க குணம் கொண்டவர்.  

vijayakanth passes away “A great loss to the human community” – Leonie

2011ம் ஆண்டு தேர்தலின் போது நான் கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி எனும் ஊரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்த இடத்திற்கு அருகேயே, அவரும் பிரச்சாரத்திற்கு தயாராக வந்துவிட்டார். என் பிரச்சாரத்தின் அருகே தே.மு.தி.க.வின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துவிட்டனர். அப்பொழுது விஜயகாந்த், ‘லியோனி பேசி முடிக்கும் வரை யாரும், எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. அவர் பேசி முடிக்கும் வரை நான் காத்திருக்கிறேன்’ என்று அவரின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். பிறகு நான் பேசி முடித்துவிட்டு செல்லும் வரை காத்திருந்து பிறகு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த நிகழ்வின் போது இருவரும் எங்கள் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டோம். அப்பொழுது, அவர் எனக்கு கை குலுக்கிவிட்டு, ‘வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று தெரிவித்துவிட்டு சென்றார். இப்படியான ஒரு நல்ல எண்ணம் கொண்ட மனிதர் விஜயகாந்த். எனவே, அவரின் இழப்பு என்பது அரசியலுக்கும், திரைத்துறைக்கும் மட்டுமின்றி மனித சமுதாயத்திற்கே பெரும் இழப்பு” என்று தெரிவித்தார்.

Next Story

'முதல்வரை இப்படிப் பேசலாமா' - லியோனிக்கு தமிழிசை கண்டனம்

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

'Can we talk like this for the chife minister' - Tamilization condemned for Leoni

 

'எங்களால் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியவில்லை; மன உளைச்சலாக இருக்கிறது' என அண்மையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்றிலிருந்தே கிளம்பிய புகைச்சல் தற்பொழுது வரை நீடிக்கிறது. அவ்வப்பொழுது செய்தியாளர்களைச் சந்திக்கும் தமிழிசையிடம் புதுவை முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இருக்கும் முரண்கள் குறித்துக் கேள்வி எழுப்பினால் ''இது வீட்டுக்குள்ள இருக்கிற சின்னச் சின்ன பிரச்சனை போன்றதுதான். இதில் மக்களைப் பாதிக்கக் கூடிய விஷயம் எதுவுமே இங்கு நடக்கவில்லை'' என்றும் ''எனக்கும் அவருக்கும் இருப்பது அக்கா தங்கை பிரச்சனைதான்'' என விளக்கங்கள் கொடுத்து வந்தார்.

 

இந்நிலையில், அண்மையில் தமிழகப் பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, புதுவை முதல்வர் ரங்கசாமி தலையாட்டி பொம்மையாக இருப்பதாகப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில் அவரின் பேச்சுக்குப் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் தேசிய கல்விக்கொள்கையின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் புதுவை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய தமிழிசை, ''தமிழகத்தின் பாடநூல் கழகத்தின் தலைவர் என்ன சொல்கிறார் என்றால், தலையாட்டும் பொம்மையாக நமது முதல்வர் இருக்கிறார் என்று சொல்கிறார். நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏனென்றால், யார் யாருக்கெல்லாமோ வாலாட்டிவிட்டு பதவியைப் பெற்றுவிட்டு நல்லதொரு திட்டங்களைக் கொடுத்த முதல்வரை அப்படிச் சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்'' என்றார்.