Skip to main content

பிக்பாஸ் டீமில் சம்பள பிரச்சனை !

Published on 20/06/2018 | Edited on 20/06/2018
kamal

 

 

 

சென்ற ஆண்டை போல இந்த ஆண்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த 17ஆம் தேதி ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நடிகர்கள், மற்றும் கலைத்துறை சேர்ந்தவர்கள் பங்குபெற்றுள்ளனர். மேலும் இந்த ஆண்டும் நடிகர் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பூந்தமல்லியை அடுத்து இவிபி பிலிம் சிட்டியில் நடந்து கொண்டிருக்கும் இதன் படப்பிடிப்பில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பள பிரச்சனை உள்ளதாக பிக்பாஸ் குழுவினர் சொல்வது போல் தற்போது ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்..."கலை இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஷண்முகம் அவர்கள் பிக்பாசில் வேலை செய்யும் உதவி கலை இயக்குனர்களுக்கு சென்ற ஆண்டை போல இந்த ஆண்டிலும் இரு நபர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.2500 வீதம் சம்பளம் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆனால் நாங்கள் ஏற்கனவே நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ.1100 வீதம் தான் தருவோம் என்று முன்கூட்டியே அறிவித்து விட்டோம். அனால் அவர் தீடிரென்று இப்போது மாற்றி பழைய சம்பளத்தையே கேட்கிறார். 

 

 

 

மேலும் இன்னும் இரண்டு பேர் வரை வேலைக்கு சேர்த்துக்கொள்ளும் படியும் கட்டாயப்படுத்துகிறார். பிறகு பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி அவர்கள் பிக்பாசில் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதாவர்கள் எத்தனை பேர் வேலைபார்க்கிறார்கள் என்று கேட்கிறார். அதற்கு நாங்கள் இங்கு யாரும் உறுப்பினர் அல்லாதவர்கள் வேலைபார்க்கவில்லை என்றும், ஏற்கனவே எங்கள் சின்ன திரை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து உங்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வேலை செய்பவர்களின் பட்டியலை அனுப்பிவிட்டோம் அதில் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னோம். மேலும் அப்படி உறுப்பினர் அல்லாது யாரேனும் பிக்பாசில் வேலை செய்தால் நீங்களே சொல்லுங்கள் அதற்கு தகுந்த முடிவை நாங்கள் எடுக்கிறோம் என்று சொன்னோம். அதற்கு செல்வமணி அவர்கள் எங்களுக்கு நேராக பட்டியலை அனுப்ப சொல்லி கட்டாயப்படுத்துகிறார். எதுவாக இருந்தாலும் எங்கள் சின்ன திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தான் எங்களால் அணுக முடியும் என்றும், நேரடியாக பட்டியலை அனுப்பக்கூடிய அதிகாரம் எங்களிடம் இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்து விட்டோம். ஆனால் செல்வமணி அவர்கள் நீங்கள் அனுப்பவில்லை என்றால் இந்த பிரச்சனையை வேறு வழியில் பார்த்துக்கொளவதாக எங்களை மிரட்டுகிறார். இருந்தும் நாங்கள் என்னவென்பதை தெளிவாக சொல்லிவிட்டோம் அதன் பிறகு என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள்" என்று அந்த ஆடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

'அந்த குடிகாரனை வெட்டி எறிந்துவிட்டேன்' - பிரபல நடிகை புலம்பல் 

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

பிக்பாஸ் மற்றும் நாகினி தொடரில் நடித்து பிரபலமான ஹிந்தி நடிகை ஸ்வேதா திவாரி முதல் கணவர் ராஜா சவுத்திரியை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு நடிகர் அபினவ் கோலியை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன் இரண்டாவது கணவருடனும் தற்போது ஸ்வேதாவிற்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

 

sweta tiwari

 

 

அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் அவரை கைது செய்த நிலையில் நடிகை ஸ்வேதா திவாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியபோது... ''கணவரை பிரிந்த பிறகு தற்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு குடிகார விஷக்கிருமியிடம் சிக்கி இருந்தது. அந்த குடிகார விஷக்கிருமி என்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தது. இப்போது குடிகார விஷக்கிருமியை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிந்து விட்டேன். பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியே சொல்ல பயப்படக்கூடாது'' என்றார்.