Skip to main content

'ஸ்டோனர்' பரத்... 'வெர்ஜின்' பிரேம்ஜி... என்ன படம் சார் இது?

Published on 19/01/2019 | Edited on 21/01/2019

இது வரை சொல்லப்படாத விஷயத்தை சொல்லியிருக்கிறோம் என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால், சமீபத்தில் வெளிவந்திருக்கும் 'சிம்பா' ட்ரைலரை பார்க்கும்போது படத்தை உருவாக்கியவர்கள் சொல்லாவிட்டாலும் நமக்கே தெரிகிறது, தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்பது. தமிழின் முதல் 'ஸ்டோனர்' படமாம் இந்த சிம்பா. 'ஸ்டோனர்' படம் என்றால்? அதை நாங்க சொல்ல மாட்டோம். கூகுள் பண்ணி பார்த்துக்கங்க.

பரத், பிரேம்ஜி இருவரும் முக்கிய பாத்திரங்களாக நடித்துள்ள 'சிம்பா' படத்தை இயக்கியிருப்பவர் அரவிந்த் ஸ்ரீதர். இவருக்கு முதல் படம் இது.  "சந்தோஷத்தோட கெமிக்கல் நேம் என்ன தெரியுமா?" என்று கேட்கும் கெளதம் வாசுதேவ் மேனன் குரலில் தொடங்கும் ட்ரைலரில் பரத் இதுவரை காணாத அளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார். பிரேம்ஜி ஒரு நாய் போல ஃபேன்சி ட்ரெஸ் அணிந்திருக்கிறார். அதே நேரம், பரத்தின் வீட்டில் வயதான தோற்றத்தில் பிரேம்ஜியின் புகைப்படம் இருக்கிறது. அந்த வீட்டில் தனியாக வாழும் பரத் எந்த நேரமும் புகைமயமாக இருக்கிறார். அவருக்குத் தோன்றும் மாயைகளே படத்தின் அடிப்படையாக இருக்கும் போல. பரத் வாழும் வீடு செம்ம இண்ட்ரஸ்டிங்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் படம் எது மாதிரியுமில்லாத புதுமாதிரியாக இருக்கிறது. பரத்திற்கு ஒரு பெரிய ப்ரேக் தேவைப்படும் நேரத்தில் வருகிறது 'சிம்பா'. இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறார் பரத்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை'- மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 'Treatment given to Ajith' - manager Suresh Chandra explains

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவல் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.