Skip to main content

'முந்தானை முடிச்சு' படத்தை மீண்டும் மீண்டும் போட்டுப் பாக்குறேன்... இயக்குநர் பாக்யராஜ் பேச்சு!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

Bhagyaraj

 

எடிட்டர் கோபி கிருஷ்ணாவின் 'கட்டிங் ஒட்டிங்' ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள படம் 'நாயே பேயே'. நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

நிகழ்வில் இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், " 'நாயே பேயே' என்ற சின்னவீடு கட்டியதாக இயக்குநர் சக்திவாசன் கூறினார். ரொம்ப சிரமப்பட்டுச் சிறப்பான முறையில் கட்டிய இயக்குநருக்கு வாழ்த்துகள். அவருக்கு அஸ்திவாரமாய் இருந்த எடிட்டர் கோபி கிருஷ்ணாவுக்கும் வாழ்த்துகள். சின்ன வீட்டில் புகுந்துவிளையாடி இருக்கும் டான்ஸ் மாஸ்டர் தினேஷுக்கு வாழ்த்துகள். இந்தப் படத்தில் சிறப்பான விஷயம் என்ன என்றால் எடிட்டர் கோபி கிருஷ்ணா தயாரிப்பாளராகியுள்ளார். மிகவும் சந்தோஷம். அதைவிட சந்தோஷம் என்னவென்றால் ஒரு புது டைரக்டருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதே போல் தினேஷ் மாஸ்டர். அவர் 'ஒரு குப்பைக் கதை' செய்த போதே நான் பாராட்டினேன்.

 

இந்தப் படத்திலும் டிரெய்லரில் நல்ல முகபாவனைகள் காட்டி நடித்திருக்கிறார். இங்கு பேசும்போது படக்குழு அடிக்கடி முந்தானை முடிச்சு பார்த்ததாகக் கூறினார்கள். நானே இப்போது 'முந்தானை முடிச்சு' படத்தை மறுபடியும் மறுபடியும் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால், மீண்டும் 'முந்தானை முடிச்சு' ரீமேக் ஆகிறது. அந்த காட்சிகளை அப்படியே வைக்க முடியாது அல்லவா? எனவே, எடுத்த கதைக்கு மீண்டும் காட்சிகள் எழுதுவது சிரமமாக இருக்கிறது. திரைக்கதை எழுதுவது இப்போது சிரமமாகி விட்டது.  அந்த காலத்தில் தவளை வைத்து எடுத்த காமெடி காட்சிகள் பழசாகிவிட்டது. இந்த காலத்துக்கு செட்டாகாது. இந்த காலத்துக்கு ஏற்றபடி காமெடி காட்சிகள் எடுக்க நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது. புதிய புதிய காட்சிகள் யோசித்து திரைக்கதை அமைத்து வருகிறோம். அதனால்தான் சொன்னேன் இப்போது திரைக்கதை எழுதுவது கடினமாகிவிட்டது. நாயே பேயே படம் வெற்றி அடைய வாழ்த்துகள்" எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழர்கள் அப்படியில்லை” - பாக்கியராஜ் வருத்தம் 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Bhagyaraj about manjummel boys writers review

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்கும் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கா’. சுந்தர் சி பாபு இசையமைத்துள்ள இப்படம் மார்ச் 29 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாக்கியராஜ், ஆர்.வி. உதயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  

இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், “சசிகலா புரடக்சன்ஸ் எனக்குத் தெரிந்தவர்கள். அதனால் அவர்கள் அழைத்தால் உடனே வந்துவிடுவேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆண்ட்ரியா இப்படத்தில் எந்தளவு கடினமாக உழைத்துள்ளார் என இயக்குநர் கூறினார். அவருக்கு வாழ்த்துகள். இயக்குநர் சினிமா என்பது அனுபவம் என்றார். அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அந்த காலத்தில் வெளிவரும் ரிவால்வர் ரீட்டா போன்ற பெண்கள் நடிக்கும் ஆக்சன் படங்கள் எனக்குப் பிடிக்கும். விஜய சாந்தி இதுபோல் படங்கள் செய்தார். இப்போது ஆண்ட்ரியா ஆக்சன் செய்துள்ளார். பார்க்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது” என்றார். 

மேலும் மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து பேசிய அவர், “மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாளத்தை விட இங்குதான் அதிகம் ஓடுகிறது. அடுத்த ஊரில் எடுக்கும் படங்கள் ஓடுகிறது. மக்கள் ரசிப்பதால் தான் ஓடுகிறது. நம்மூர் எழுத்தாளர் அதை காட்டமாக விமர்சித்துள்ளார். அதிலும் படத்தை மட்டுமின்றி கேரள மக்களை விமர்சித்து விட்டார். அது தமிழனுடைய பண்பாடு கிடையாது. நாம் அனைவரையும் பாராட்டி தான் சொல்லுவோமே தவிர இறங்கி விமர்சனம் செய்தது கிடையாது. பெரிய எழுத்தாளர் இப்படி பேசியது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இதை இப்போது சொல்லக் காரணம் தமிழர்கள் யாரும் கண்டிக்கவில்லையே எனக் கேரள மக்கள் நினைத்துவிடக் கூடாது. தமிழர்கள் அப்படியில்லை” என்றார்.

Next Story

“சொன்னதின் நோக்கம் இது தான்” - போலீஸ் அறிக்கைக்கு பாக்கியராஜ் தன்னிலை விளக்கம்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
k bhagyaraj explained police statement

இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தனது அனுபவங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த 12 ஆம் தேதி நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற தலைப்பில், “கோவை  மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே ஒரு ஆறு உள்ளது. அந்த ஆற்றில் செல்லும் மக்கள் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். தொடக்கத்தில் ஆற்றில் உள்ள சுழலில் மாட்டிக் கொள்வார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. உள்ளூர்க்காரர் ஒருவர் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு உடலை மீட்டுத் தருவார்.

நாளடைவில் தான் தண்ணீருக்குள் மூச்சைப் பிடிக்கும் தன் திறமையை அவன் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. தண்ணீருக்குள் இறங்குபவர்களை பின்தொடர்ந்து, திடீரென்று காலை பிடித்து இழுத்து பாறைக்குள் சிக்க வைத்துவிடுவார். பிறகு இவரே வெளியில் வந்து அவர்களது உடலை மீட்டுக் கொடுப்பதை தொழிலாக வைத்துள்ளார். இது மிகவும் வருத்தமளிக்கிறது. அந்தப் பகுதிக்கு செல்வோர் கவனமாக இருங்கள்..” என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

பின்பு பாக்கியராஜ் கூறிய விஷயங்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாக்யராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என கூறியிருந்தார். மேலும் அந்த நீண்ட அறிக்கையில், வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச்செயல் என எச்சரித்திருந்தார். இந்த நிலையில் காவல் துறை அறிக்கைக்கு பதில் தெரிவித்து பாக்கியராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “போலீஸுக்கு எப்போதுமே தப்பு நடக்கும் போது தெரியாது. அதுக்கப்புறம் தான் அவுங்க கண்டுபிடிப்பாங்க. அந்த சம்பவத்தில் போலீஸை எந்த விதத்திலும் சம்மந்தப்படுத்தவில்லை. சொன்னதின் நோக்கமே மீண்டும் இது போன்று நடந்து விடக்கூடாது என்பதற்காகத் தான். ஆனால் இதை சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவோடு தொடர்பு படுத்திவிட்டார்கள். 

அவரது கார் விபத்து ஆன பின்பு அவரது உடல் தேடப்பட்டு வந்தது.  உடலைத் தேடி கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார்கள். அந்த பரிசுத் தொகையால் இந்த செய்தி பரபரப்பாகி விட்டது. அதனால் இரண்டு சம்பவத்தையும் தொடர்புபடுத்தி அனைவரிடத்திலும் கருத்து கேட்கத் தொடங்கிவிட்டனர். அது போலீஸ் வரை போய்விட்டது. அவர்கள் வதந்தி என சொல்லிவிட்டனர். அதற்கு விளக்கம் கேட்டு என்னிடம் நிறைய பேர் கேட்கின்றனர். காவல் துறையினரின் கவனக் குறைவு, அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என எதையும் நான் சொல்லவில்லை. சொன்னதின் நோக்கமே மீண்டும் இது போன்று நடந்து விடக்கூடாது என்பது மட்டுமே. காவல் துறையை நான் சம்மந்தப்படுத்தி பேசவில்லை. ஆனால், இப்போது திருப்பி நான் விசாரித்த போது, 15 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரியவந்தது" என தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.