நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
இதற்கிடையே கரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே சில மாதங்களாகவே திரை பிரபலங்களான விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா, நிதீஷ் வீரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் அருண்ராஜா மனைவி சிந்துஜா மற்றும் நிதீஷ் வீரா மறைவுக்கு நடிகர் பால சரவணன் சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...
"நம்பவே முடியல...என்ன நடக்குதுனே தெரில...நிதிஷ் அண்ணே" என உருக்கமாகப் பதிவிட்டுள்ள அவர், "அன்பு நண்பரே அருண்ராஜா காமராஜ் எத்தனை பெரிய இழப்பு உங்களுக்கு. வார்த்தைகளற்று போனேன். மனம் ஏற்க மறுக்கிறது" என இரங்கல் தெரிவித்துள்ளார்.