/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/936_1.jpg)
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அமீர் என்ற மகனும் கதீஜா, ரெஹிமா என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் கதீஜாவுக்கும் தொழிலதிபரும் ஆடியோ இன்ஜினியருமான ரியாஸ்தீன் ஷேக் என்பவருக்கும் கடந்த மாதம் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த 10 ஆம்தேதி திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள ஏ.ஆர் பிலிம் சிட்டியில்ஏ.ஆர் ரஹ்மான் மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் சூர்யா உள்ளிட்ட உள்நாட்டு பிரபலங்கள் முதல் வெளிநாட்டு பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது அன்பு மகள்கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் திருமணத்தில் எங்களுடன் இணைந்து நின்றதற்கு நன்றி. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களின்ஆசீர்வாதங்கள் இந்த நிகழ்வை அழகான நாளாக மட்டுமல்ல, மறக்கமுடியாதநாளாகவும்மாற்றியுள்ளது. குறிப்பாக வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அத்துடன் இந்த நிகழ்விற்கு ஒத்துழைப்பு தந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை உள்ளிட்ட பலருக்கும் அந்த அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)