Skip to main content

'சினிமாவில் எனக்கான இடம் ராகவா லாரன்ஸ் மூலம் கிடைத்தது' - இசையமைப்பாளர் அம்ரீஷ்

Published on 20/09/2018 | Edited on 20/09/2018
amrish

 

விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி கூட்டணியில் உருவான 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து இப்பாடலை பாடப் பட்ட போதே இவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டார் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் T.சிவா. இதைத்தொடர்ந்து இவர் தற்போது தயாரிக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தில் இப்பாடலை  'மொட்ட சிவா கெட்ட சிவா' புகழ் அம்ரீஷ் இசையில் உபயோகப்படுத்தியுள்ளது உலகம் முழுவதும் பாப்புலராகி யூடியூபில் இதுவரை சுமார் 60 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் கண்டு களித்து ஹிட்டடித்துள்ளது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும் போது...

 

 

 

"இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சிவா சார், இயக்குனர் ஷக்திசிதம்பரம் சார், பிரபுதேவா சார் ஆகியோருக்கும் இந்த பாடலை ட்விட் மூலம் மேலும் பாப்புலராக்கிய திரு.தனுஷ் சாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரபு தேவா சார் எவ்வளவோ டியூனுக்கு வித விதமான டான்ஸ் ஆடி இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் தற்போது சின்ன மச்சான் பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன். எனக்கான ஒரு இடம் சினிமாவில் ராகவா லாரன்ஸ் மூலம் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் மூலமாகவும், பிரபுதேவா சாரின் 'சார்லி சாப்ளின் 2' மூலமும் எனக்கு கிடைத்திருக்கிறது எனும்போது பெருமையாக இருக்கிறது. மிகப் பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷமே. அடுத்து சார்லி சாப்ளின் 2 படத்தில் இன்னும் 4 பாடல்கள் இருக்கு. அதுவும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும் என்று நம்பறேன்" என்றார். பிரபுதேவா - நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அவர்களையெல்லாம் யூ-ட்யூபில் இருந்து வெளியேற்றப் போறோம்..." - 'அம்மா கிரியேஷன்ஸ்' சிவா ஆக்ஷன்      

Published on 31/01/2019 | Edited on 31/01/2019

'அம்மா கிரியேஷன்ஸ்' சிவா என்றால் சினிமா வட்டத்தையும் தாண்டி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம். 'பூந்தோட்ட காவல்காரன்' தற்போது சார்லி சாப்ளின் 2 வரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆக்டிவான தயாரிப்பாளராக இருப்பவர். தயாரிப்பாளர் சங்கத்திலும் ஆக்டிவ்வாக இருப்பவர். சமீபத்தில் இவர் தயாரித்து வெளியாகியுள்ள சார்லி சாப்ளின் 2 படத்தை தரக்குறைவாக விமர்சித்ததாகவும் பணம் கேட்டு மிரட்டியதாகவும் ப்ளூ சட்டை மாறன் என்று அழைக்கப்படும் தமிழ் டாக்கீஸ் இளமாறன் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அவரிடம் பேசினோம்...

 

amma creations siva



ஒரு திரைப்பட விமர்சகர் மேல காவல்துறையில் புகார் அளிக்கும் அளவுக்கு என்ன நடந்தது?

'தமிழ் டாக்கீஸ்' மாறன் சார்லி சாப்லின் 2 படத்தை விமர்சனம் செய்திருக்கிறார். அதில் “இன்னமும் இவனுங்க அப்டேட் ஆகாம படம் எடுத்து வச்சிகிட்டு நம்ப உசுர வாங்குரானுக, வாட்ஸ் ஆப்ல டெலிட் ஃபார் எவரி ஒன்னு ஆப்ஷன் இருக்கு. அது கூட தெரியாம படம் எடுக்குரானுக” என்று ஒருமையில் அவர் இஷ்டத்துக்குப் பேசியிருக்கிறார். நாங்கள் படத்தில் தெளிவாகக்  கூறியுள்ளோம், ஒரு மணி நேரத்துக்குள்ளாக மட்டுமே அவ்வாறு டெலிட் செய்ய முடியும். அதை வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் கேட்டும் உறுதிசெய்துகொண்டோம். இதை எங்கள் இயக்குனர் சக்தி சிதம்பரம் மாறனிடம் ஃபோனில் தெரிவித்து மறுப்பு கூறும்படி கேட்டபோது “அதெல்லம் நான் சொன்னது சொன்னதுதான், மாத்த முடியாது” என்றும் “மறுப்புக் கொடுத்தா எனக்கு என்ன பெனிஃபிட்” என்றும் கேட்டுள்ளார். தன் விமர்சன வீடியோவில் இந்தப் படத்துக்குப் போகவேண்டாம் என்று கூறுகிறார், இதற்கே அவர் மீது வழக்கு தொடரலாம். இவ்வாறு விமர்சனம் என்ற பெயரில் அநாகரீக சொற்களை பயன்படுத்தியும்  அவருக்கான சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கையை அதிகப் படுத்திக்கொள்ள படங்களை திட்டியும் வருகிறார். அதிலும் முக்கியமாக அவருக்கு விளம்பரம் என்ற பெயரில் பணம் கொடுப்பவர்களுக்கு சாதகமாகவும் தராதவர்களின் படங்களுக்கு கடுமையாகவும் விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற ஏக்கம் நிறைய பேருக்கு உண்டு. எனவே முதலில் நான் புகார் கொடுத்துள்ளேன். என்னைத் தொடர்ந்து பலர் புகார் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் இது போன்ற ஆட்கள் யூ-ட்யூபில் இருந்து வெளியேறும் நிலையை சட்டபூர்வமாக உருவாக்குவோம். ஒருவருக்குக் கிடைக்கும் தண்டனையைப் பார்த்து மற்றவர்கள் நாகரீகமாக விமர்சிப்பார்கள்.

அப்போ விமர்சனங்கள் வேண்டாம்னு சொல்றீங்களா?

விமர்சனங்கள் ரொம்ப முக்கியம்,  விமர்சனங்களால் ஒரு படம் தோல்வியடைவதில்லை. ஆனால் விமர்சனத்தால் ஒரு படம் வெற்றியடையும்.  நாகரீகமாகவும் தொழில்நுட்ப ரீதியிலும் விமர்சிக்கிற நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடையே மாறன் போன்றோரும் இருக்கிறார்கள். சினிமா ஒரு தொழில்தான், ஒரு படத்தை நம்பி பலருடைய குடும்பங்கள் இருக்கின்றன. அதனை மனதில் வைத்து நாகரீகமாக விமர்சிக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு பிஸ்கட் நிறுவனத்தின் பிஸ்கட்டை கையில் வைத்துக்கொண்டு இதை வாங்காதீர்கள் என விமர்சனம் செய்ய முடியாது. அதற்கான காப்பிரைட் சட்டம் கடுமையானது.  சினிமாவுக்கு அவ்வாறு இல்லை என்பதே பிரச்சனை. படம் வெளியாகி ஒரு நாள் மட்டும்தான் விமர்சகர் சொல்வதை கேட்டு படத்துக்கு வருவார்கள். அதன் பிறகு படம் பார்த்தவன் பேச்சைக் கேட்டுதான் கூட்டம் வருகிறது. தான் நம்பிப் பிழைக்கும் சினிமா துறையை அழிக்கும் வேலையை மாறன் போன்றவர்கள் செய்கிறார்கள். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

 

blue sattai maran



விமர்சகர்கள் ஒரு பக்கம் இருக்க, இந்த தமிழ் ராக்கர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கே... அதை  ஒழிக்கவே முடியாதா?

இதுல சாபக்கேடு என்னனா, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ராக்கர்ஸ்னு எதுவும் இல்லை. தமிழ் ராக்கர்ஸ் மட்டும்தான் இருக்கு. அதை ஒழிக்க முடியும், ஆனா பதவியேற்று 6 மாசத்துல ஒழிக்குறேன்னு சொல்லி பதவிக்கு வந்தவங்கலாம் 2 வருஷமாகியும் ஒன்னும் பண்ணல. கடந்த 6 மாசமா அதை பற்றி பேசக்கூட இல்ல. தேர்தல் வாக்குறுதியில இதெல்லாம்  சொல்லித்தான் ஓட்டு வாங்குனார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு ராமநாராயணன் காலம் பொற்காலம் என்றால் விஷாலின் காலம்தான் அழிவு காலம்.

நடிகர் சங்க கட்டிடம் பூட்டை உடைத்ததற்காக விஷால் கைது செய்யப்பட்ட போது 'நான் இததான் எதிர்பார்த்தேன்'னு சொல்லியிருக்கார். தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை அவர் சவலாகத்தானே எடுத்துக்கொள்கிறார்?

விஷால் அரசியல் பண்றதுக்கு இந்தப் பதவிக்கு வந்துருக்கக்கூடாது. அரசாங்கத்துக்கு இணக்கமா இருந்து சங்கத்துக்கு வேண்டியத செய்றதுக்குத்தான் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி. அதை விட்டுட்டு எலெக்‌ஷன்ல நிக்குறதுக்கு இந்தப்  பதவிய பயன்படுத்த கூடாது. ராம நாராயணன் தலைவரா இருந்தப்போ கலைஞர் கூட அவருக்கு இருந்த நெருக்கத்த பயன்படுத்தி சங்கத்துக்கு நிறைய நல்லது செஞ்சாரு. அதுதான் சங்கத்தோட பொற்காலம், விஷால் காலம் அழிவுகாலம்னுதான் சொல்லனும். கையை தூக்கிப் பேசினார் வெறும் 28 லட்சம் கேபிள் டீவியில் வந்ததை 1.50 கோடியாக உயர்த்தியாச்சு என்று. இதுவரைக்கும் ஒரு ரூபா கூட வரல. இருந்தாலும் அவர் ரொம்ப புத்திசாலி, எல்லோருக்கும் வெளிப்படையா லஞ்சம் கொடுத்துவச்சுருக்காரு. 60 வயசுக்கு மேல இருக்குறவங்களுக்கு முன்னாடி 6000 கொடுத்தோம், இவரு 12000 ஆக்குனாரு. 50 வயசுக்கு மேல வேலை இல்லாதவங்களுக்கு 5000 கொடுக்குறாரு. இருந்த 7.50 கோடி சங்க நிதியையும் இப்படியே காலி பண்ணிட்டாரு. தேர்தலின் போது இதையெல்லாம் நிதி உருவாக்கி செய்வோம்ணாங்க, ஒன்னும் இல்ல. இப்ப இளையராஜா விழா நடத்தி இதை சரிகட்டக்கூடாது. இருந்த நிதிக்கு மேல அதிகமா சேர்க்கணும். மார்ச் மாசம் மறுபடியும் தேர்தல் வரணும், இவரே மறுபடியும் நின்னு ஜெயிச்சு சங்கத்த இன்னும் காலி பண்ணாலும் பண்ணதுதான்.
 

 

 

Next Story

சின்ன மச்சான் செவத்த மச்சான் மட்டும் போதுமா? சார்லி சாப்ளின் 2 - விமர்சனம்

Published on 26/01/2019 | Edited on 30/01/2019

"உங்க ஃபோன் தர்றீங்களா... ஒரு கால் பண்ணணும்" என்று, தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணிடம் ஃபோனை வாங்கி அந்த மெஸேஜை டெலிட் பண்ணியிருந்தால் எளிதில் முடியும் வேலை. புறாவுக்கு போரா?

 

charlie chaplin 2



2002ஆம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் இயக்குனர் சக்தி சிதம்பரத்தின் வெற்றிப் படங்களில் ஒன்று. இது மகத்தான நகைச்சுவைப் படம் என்று பாராட்டப்பட்ட படமில்லையானாலும் வெற்றிகரமான காமெடிப் படமென்பதால் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்பொழுது சார்லி சாப்ளின் 2, இதன் தொடர்ச்சியாக அல்லாமல் பிரபுதேவா - பிரபு காம்போ, கதைக்களத்தில் சில ஒற்றுமைகளுடன் வேறு படமாக வெளிவந்திருக்கிறது சார்லி சாப்ளின் 2.

ஆன்லைன் மேட்ரிமோனி நிறுவனம் நடத்தும் பிரபுதேவாவுக்குத்  திருமணம் செய்ய பெண் தேடுகிறார்கள் பெற்றோர். சமூக சேவகியான நிக்கி கல்ராணிக்கு ஒரு பெரிய நோய் இருப்பதாகவும் அதனால் பதினைந்து நாட்களில் உயிரிழக்கப்போவதாகவும் நினைத்து அவரையே திருமணம் செய்ய விரும்புகிறார் பிரபுதேவா. பிரபுவின் மகளான நிக்கி கல்ராணி நோயாளி இல்லையென்பது தெரிய வருகிறது. ஆனால், பிரச்சனை வேறு விதத்தில் வருகிறது. அந்தப் பிரச்சனையையும் பிரச்சனை தீர்வதையும் காமெடி சரவெடியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம்.

 

charlie chaplin 2 prabhu



அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் குரலில் தொடங்கும் படம் முதலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதில் 'எத்தனை வருஷமானாலும் அதே வயசுதான்' என்று பிரபுதேவா அறிமுகப்படுத்தப்படுகிறார். உண்மைதான், வயதாவதே தெரியவில்லை, முதல் பகுதியில் இருந்த பிரபுதேவாதான் இதிலும் தெரிகிறார். ஒவ்வொரு பாடலிலும் அவரது ஆட்டம்தான் ஹைலைட். பிரபு, தேடித் தேடி உண்ணும் ஃபுட்டியாக, நாயகி நிக்கியின் டேடியாக வருகிறார். தன்னைத் தானே கிண்டல் செய்துகொள்கிறார், மிக அளவாகவே சிரிக்கவைக்கிறார். சார்லி சாப்ளின் என்ற டைட்டிலுக்காக சில காட்சிகளில் சார்லி சாப்ளின் பாணியில் நடித்திருக்கிறார். அவர் நன்றாக நடித்தாலும் காட்சி முழுதாக ஈர்க்கவில்லை.  நிக்கி கல்ரானி, முறைப்பதும், நடனமாடுவதுமென நாயகி வேலையை நல்லபடியாக செய்திருக்கிறார். விவேக் பிரசன்னா, அரவிந்த், சிவா, உள்ளிட்ட பலரும் படத்தில் இருக்கும் காமெடி படமென்றாலும் சிறிதே சிரிக்கவைப்பவர் ரவி மரியா மட்டுமே.

படத்தில் அத்தனை குழப்பங்களையும் உருவாக்கும் அடிப்படை பிரச்சனை மிக பலவீனமாக இருப்பதால் அதன் மேல் நடக்கும் காமெடிகள் எளிதில் ரசிக்கவைக்கவில்லை. அதைத் தாண்டி சிரிக்க சில காட்சிகள் இருப்பது ஆறுதல். திருப்பதியில் HCL கட்டிடம், புது ஹாஃப் கோட் போட்டுகொண்டு ஃபுல் மேக்கப்புடன் செம்மரக்கட்டை வெட்டும் கடத்தல்காரர்கள், சாலையில் செல்பவர்களிடம் 'ஐ லவ் யூ' சொல்லி ரியாக்ஷன் பார்க்கும் சைக்காலஜி மாணவிகள், நம்பவே முடியாத குழப்பங்கள் என படம் முழுவதுமே சமரசங்களுடன் சற்று அலட்சியமாக எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
 

charlie chaplin



செந்தில் - ராஜலக்ஷ்மி உபயத்தால் 'சின்ன மச்சான், செவத்த மச்சான்' செம்ம ஹிட்டாகிவிட்டது. 'ஐ வாண்ட் டு மேரி யூ மாமா' பாடல் ஆட வைக்கும் ரகம். மற்றபடி அமரிஷின் இசை இன்னும் கொஞ்சம் அளவாக இருக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு காட்சியிலும் ஓவரான இசையை கொடுத்திருக்கிறார், கொஞ்சம் பொறுமை காக்கலாம். இசை என்பது அமைதியையும் சேர்த்தது என்பதை அம்ரிஷ் சற்று கருத்தில் கொள்ளவேண்டும். சௌந்தர் ராஜனின் ஒளிப்பதிவு திருவிழா போல வண்ணமயமாக இருக்கிறது. திருப்பதி காட்சிகள் நடப்பது திருப்பதியில்  என நம்பவைக்க முயற்சி செய்திருக்கிறது. படத்தொகுப்பாளர் சசிக்குமார் காட்சிகளை தொகுத்த விதத்திலும் சில எஃபெக்டுகளை பயன்படுத்தியும் படத்திற்கு காமெடி டோன் தந்திருக்கிறார்.

சார்லி சாப்ளின் 2 - சில நகைச்சுவை காட்சிகளும் சின்ன மச்சான் பாடலும். அது மட்டும் போதுமென்றால் ஓகே.