Skip to main content

கரோனாவில் இருந்து மீண்ட தனுஷ் பட நடிகை!

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

fgsdgdsf

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

இந்த நிலையில், 'அசுரன்' பட நடிகை அம்மு அபிராமி தற்போது கரோனா தொற்றிலுருந்து விடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் அன்பான வேண்டுதல்களாலும், கடவுளின் கிருபையாலும் நான் கோவிட்-19 தொற்றுலிருந்து முற்றிலும் மீண்டுள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். முகமூடியை அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். நீங்கள் வெளியே செல்வதைத் தவிர்த்தால் கடவுள் இரக்கமுள்ளவராக இருப்பார்" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரிலீஸுக்கு ரெடியான ‘ஹாட்ஸ்பாட்’ (புகைப்படங்கள்)

Published on 19/03/2024 | Edited on 20/03/2024

 

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கேஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

 

Next Story

‘டெரரிஸ்ட் டிராக்கர்’ தொழில்நுட்பத்தில் ‘ஜிகிரி தோஸ்த்’

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

jigiri dhosth movie update

 

பிரபல நடிகர் ரியாஸ் கான் மகன் ஷாரிக் ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஜிகிரி தோஸ்த்’. இப்படத்தில் அம்மு அபிராமி, விஜே ஆஷிக், பவித்ரா லஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அரண்.வி இயக்கி நடித்தும் உள்ளார். மேலும் பிரதீப் ஜோஸோடு இணைந்து தயாரித்தும் உள்ளார். இவர் ஷங்கரின் 2.0 படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். அஷ்வின் விநாயகமூர்த்தி என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

 

இப்படம் மூன்று நண்பர்கள் அவுட்டிங் செல்லும் வழியில், ஒரு பெண் கொடூர கேங்ஸ்டர்களால் கடத்தப்படுவதை பார்க்கின்றனர். பிறகு, அந்த பெண்ணை கேங்ஸ்டரிடம் இருந்து காப்பாற்றினார்களா என்பதே படத்தின் கதையாக உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ‘டெரரிஸ்ட் டிராக்கர்’ எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். அதை சிறப்பம்சமாக சொல்கின்றனர்.

 

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.