Skip to main content

முன்பு அருண் விஜய் மீது மரியாதை இருந்தது; இப்போது அன்பும் பல மடங்கு வந்துவிட்டது” - அம்மு அபிராமி கூறும் காரணம்

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Ammu Abhirami

 

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1ஆம் தேதி வெளியான 'யானை' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அம்மு அபிராமியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் யானை பட அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

”யானை படத்தில் நடித்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. இவ்வளவு பெரிய நடிகர்கள் குழு நடித்துள்ள ஒரு படத்தில் சிறிய பகுதியாக நானும் இருந்ததே எனக்கு மிகப்பெரிய விஷயம். படத்தில் ரொம்பவும் முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்திருக்கிறேன். ஹரி சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது முதலில் பயமாக இருந்தது. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்றவர்களை அவர் நடத்தும் விதத்தை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. குறிப்பாக பெண்களை ரொம்பவும் தன்மையாக நடத்துவார். 

 

முதல் காட்சியிலேயே அவருடைய இயக்கத்தில் நடிப்பதை வசதியாக உணர ஆரம்பித்தேன். அவரைப் பொறுத்தவரை சரியான நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவேண்டும் என்று நினைப்பார். நான் அந்த விஷயத்தில் சரியாக இருப்பதால் அவர் படத்தில் நடிப்பதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. அவருக்கு என்ன வேணும் என்பதை ஹரி சார் தெளிவாக சொல்லிவிடுவார். அவர் சொல்வதைக் கேட்டால் நாம் கண்ணை மூடிக்கொண்டு நடித்துவிடலாம். அந்த அளவிற்கு இன்புட்ஸ் கொடுப்பார். 

 

படத்தில் ஃபைட் சீன்ஸ் பார்க்கும்போது ரொம்பவும் பயமாக இருந்தது. நல்லவேளை நமக்கு எந்த சீனும் அப்படி இல்லை என்று நினைத்தேன். எப்போது அடிபடும் என்றே தெரியாது. அவ்வளவு உழைப்பை போட்டு அவர்கள் நடிப்பது பெரிய விஷயம். ஸ்டண்ட் மாஸ்டர்ஸ், ஸ்டண்ட் கலைஞர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். 

 

படத்தில் அருண் விஜய்யை ரவி அப்பா என்றுதான் அழைப்பேன். மிகப்பெரிய குடும்பப் பின்னணி கொண்ட நடிகர் மற்றும் தமிழ் சினிமாவில் முக்கியமான ஸ்டாராக அருண் விஜய் இருக்கிறார். ஆனால், அதையெல்லாம் அவர் வெளிக்காட்டிக்கொண்டதே இல்லை. தனிப்பட்ட முறையிலும் அவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ராட்சசன் படம் வெளியானதும் ரொம்ப நல்லா நடிச்சிருக்க என்று எனக்கு மெசேஜ் பண்ண ஃபர்ஸ்ட் செலிபிரிட்டி அருண் விஜய்தான். அப்போது இருந்தே அவர் மீது எனக்கு பெரிய மரியாதை இருந்தது. அவருடன் இணைந்து நடித்த பிறகு பல மடங்கு அன்பும் வந்துவிட்டது. 

 

பிரியா பவானி சங்கருடன் எனக்கு நிறைய சீன்ஸ் இருந்தது. அவருடன் பழகுவது நம் குடும்பத்தில் உள்ள அக்காவிடம் பழகுவதுபோல இருக்கும். ராதிகா மேம் உடன் இணைந்து நடித்ததெல்லாம் எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம். 

 

ஹரி சாரின் மசாலா கலந்த ஃபேமிலி ட்ராமா படங்களை ரொம்ப நாட்களாக மிஸ் செய்தவர்களுக்கு நல்ல ட்ரீட்டாக யானை படம் அமைந்துள்ளது. படத்தில் கருத்து சொல்லப்பட்டிருந்தாலும் வலிந்து திணிக்காமல் கதைபோன போக்கில் சொல்லப்பட்டுள்ளது. குடும்பத்துடன் முகம் சுழிக்காமல் பார்க்கக்கூடிய படமாக யானை இருக்கும். திரையரங்கில் சென்று பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்கும்”.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“படம் பிடிக்கலைன்னா காலனியால் கூட அடிங்க” - இயக்குநர் பகிர் 

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
hotspot director vignesh karthick viral statement

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட சங்க நிர்வாகிகளுக்கு இப்படம் திரையிடப்பட்டது. இதில் பேரரசு, மந்திர மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் படம் பிடிக்கவில்லை என்றால் என்னை காலனியால் கூட அடிங்க என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது,  “படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இன்னும் தியேட்டரில் நாங்க எதிர்பார்க்கிற கூட்டம் வரவில்லை. ஒரு வேளை ட்ரைலர் பார்த்து சில பேர் வராம இருக்காங்களா என தெரியவில்லை. மலையாள படங்களுக்கு அவ்ளோ சப்போர்ட் பன்றீங்க.

நீங்க கண்டிப்பா தியேட்டருக்கு வந்து பாத்தீங்கனா படம் பிடிக்கும். அப்படி பிடிக்கலைனா காலனியால் கூட என்னை அடிங்க. இதை சும்மா பேச்சுக்கு நான் சொல்லவில்லை. நீங்க படம் பாத்தீங்கனா, நல்லாருக்கு, ரொம்ப நல்லாருக்கு இல்ல சூப்பரா இருக்கு இப்படி தான் சொல்வீங்க. பிடிக்கல, அல்லது ஏண்டா வந்தோம்னு ஃபீல் பண்ண மாட்டீங்க. அப்படி ஃபீல் பண்ணீங்கன்னா முன்னாடி சொன்னது போல காலனியால் கூட அடிங்க. நீங்க தியேட்டருக்கு வந்து பார்த்தால் தான் படம் இன்னும் அதிகளவு மக்களை சென்றடையும். 

கருத்து சொல்கிற படமென்பதால் போர் அடிக்கிற மாதிரி எதுவும் சொல்லவில்லை. பயங்கர ஜாலியா தான் சொல்லியிருக்கிறோம். இது தியேட்டருக்கான படம். ஓடிடியில் பார்க்கும் போது அந்த அனுபவம் இருக்காது. ஆனால் தியேட்டரில் மக்களுடன் பார்ப்பது வேறுமாதியான அனுபவம். அதனால் முடிஞ்ச அளவிற்கு தியேட்டருக்கு வந்து பாருங்க. நீங்க சப்போர்ட் பண்ணி அதிகளவு பேசப்பட்டால் தான், இதுக்கப்புறம் பண்ணும் படமும் வித்தியாசமா பண்ணனும்னு தோணும். இல்லைனா வழக்கம் போல் படம் தான் பண்ண தோணும். அது உங்க கையில் தான் இருக்கிறது” என்றார்.  

Next Story

தன்பாலின ஈர்ப்பு குறித்த கேள்வி; அம்மு அபிராமியின் பளிச்சென்ற பதில்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
ammu abhirami about lesbians dialogue

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கேஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது.

இதையொட்டி நக்கீரன் ஸ்டுடியோவிற்கு படத்தில் நடித்த கலையரசன், சோபியா, அம்மு அபிராமி, சுபாஷ் ஆகியோர் நேர்காணல் கொடுத்திருந்தார்கள். அப்போது அம்மு அபிராபியிடம் “தான் ஒரு தன்பாலீன ஈர்ப்பாளர்” என அவர் பேசிய வசனம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இப்போது உலகத்தில் எல்லோரும் முற்போக்கை நோக்கி போக ஆரம்பிச்சுட்டோம். காதல் என்பது காதல்தான். அது உண்மையாக இருந்தால் போதும். குறிப்பிட்ட பாலினத்தவரை பார்த்துத்தான் வர வேண்டும் என்றெல்லாம் கிடையாது. அந்த வசனத்தை பேசியதற்காக எந்த விதத்திலும் நான் வெட்கப்படவில்லை. அது ஒன்றும் தவறும் கிடையாது” என்றுள்ளார்.