Skip to main content

'என்னுடைய ஆல் டைம் பேவரைட் அவர் தான்' - பிக்பாஸ் ஐஸ்வர்யா 

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
aishwarya dutta

 

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகமாகி, பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தா தற்போது நடிகர் ஆரியுடன் ஒரு படத்திலும், நடிகர் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வரும் நிலையில் தன் படங்கள் குறித்து ஐஸ்வர்யா தத்தா பேசும்போது.... 

 

 

 

நான் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ரெண்டு படங்களுமே என்னுடைய கேரியரில் முக்கியமான படங்களாக இருக்கும். என்னுடைய ஆல் டைம் பேவரைட் சிம்புதான். நான் சினிமாவிற்குள் வருவதற்கு முன்னரே எனக்கு சிம்புவைப் ரொம்ப பிடிக்கும். ஒரு படமாவது அவருடன் நடிக்கவேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கின்றது. இதுவரை அவரிடம்  இதுகுறித்து சொன்னது இல்லை. அதே மாதிரி நடிகைகளில்  நயன்தாரா, அதிதி பாலன் ஆகிய இரண்டு பேருடைய நடிப்பும் ரொம்ப பிடிக்கும். இவர்கள் இருவரும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பதால் பிடிக்கும். பெரிய இயக்குனர்கள் படங்களிலும் விரைவில் நடிப்பேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா-வின் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
mahat raghavendra movie update

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில், இயக்குநர் பிரபுராம். செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கும் படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'. ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சாக்ஷி அகர்வால், யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு தரண் குமார் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் கிருஷ்ணன் பின்னணி இசையை கவனித்துள்ளர். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். 
 

Next Story

பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தக்கோரிய வழக்கு - தொகுப்பாளருக்கு நோட்டீஸ்

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

court send notice to nagarjuna for bigboss show

 

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகர்ஜுனா தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி சமூக சீர்கேட்டுக்குக் காரணமாக உள்ளது எனக் கூறி நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி ஒரு பொதுநல வழக்கு ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

 

court send notice to nagarjuna for bigboss show

 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 14 நாட்களுக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.