Skip to main content

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட படப்பிடிப்பு தொடக்கம்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Aishwarya Rajesh

 

‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜித்தன் ரமேஷ், கிட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் 40வது படமாக இப்படம் உருவாகவுள்ளது.

 

சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் உட்பட படம் குறித்த முழுமையான விவரங்கள் படக்குழு தரப்பிலிருந்து அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உதவி செய்வதை வெளியில் சொல்ல வேண்டும் என அவசியமில்லை” - ஐஸ்வர்யா ராஜேஷ்

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
aishwarya rajesh about vijayakanth

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சுழல் 2 வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஜெய்யின் கருப்பர் நகரம், விஷ்ணு விஷாலின் மோகன் தாஸ் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்படி படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது, தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். 

இந்த நிலையில் தாம்பரம் அருகில், ஒரு தனியார் கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் பேசுகையில், “விஜயகாந்த் இறப்பு ரொம்ப வருத்தம் தான். நான் ஊரில் இல்லை. வந்தவுடன் இந்த விழாவிற்காக வந்துவிட்டேன். நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது சரி என்றால், அதை வைப்பதில் தவறில்லை. எல்லாருடைய கருத்து தான் என்னுடைய கருத்தும். 

மழை வெள்ள பாதிப்பால், எல்லாருமே உதவி செய்வது நல்ல விஷயம். அதை நாம் ஊக்குவிக்க வேண்டும். நீங்க பண்ணவில்லையா... போன்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும். நானும், உதவி செய்திருக்கேன். அதை வெளியில் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. நாம உதவி செய்வது நமக்கு தெரிந்தால் போதும். மற்றவர்களுக்கு தெரிய படுத்துவதும், நல்ல விஷயம் தான். அதை பார்த்து இளைஞர்கள் நிறைய பேர் உதவி செய்ய முன்வருவார்கள்” என்றார். 

Next Story

"இந்த நல்ல விசயம் அனைவரையும் சென்றடைய வேண்டும்" - ஐஸ்வர்யா ராஜேஷ்

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

Actress Aishwarya Rajesh flagged off a program World Food Day

 

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்றுத் தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் இதனை மாற்றும் முனைப்பில் ஆலன் இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். 

 

இந்நிறுவனத்தின் சார்பில்  உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் 5000 பேருக்கு பிரியாணி உணவு சமைத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.  

 

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நடத்திய இந்த வருட நிகழ்வினில், ஜெர்மனியின் அரசு  ஆலோசகர் ஜெனரல் மைக்கேலா குச்லர்,  காவல் உதவி ஆணையர் (அடையாறு வட்டம்) - நெல்சன்,  துணை ஆட்சியர் - ப்ரீத்தி பார்கவி, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் நடிகை சனம் ஷெட்டி ஆகியோருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு கொடியசைத்து இந்நிகழ்வை துவக்கி வைத்தார். 

 

இந்நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, "ஆலனை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். ஆரம்பத்தில் சில விசயங்களை இணையத்தில் பகிரச் சொல்லி கேட்பார். பின்னர் அவர் செய்யும் விசயங்கள் பார்த்து பிரமித்தேன். அதன்பின் நானாகவே எனக்கு தெரிந்தவர்களிடம் ஆலனின் ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். இன்றைய சமூகத்தில் நமக்கு 35 ரூபாய் என்பது வெகு சாதாரணமான பணம் அது 35 ஆயிரம் கோடியாக தேவைப்படுபவர்களுக்கு சென்று சேர்வது ஆச்சர்யம்.  ஆனால் அந்த ஆச்சர்யம் நிகழ வேண்டுமெனில் அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 100, 200 ரூபாய் கூட இல்லை வெறும் 35 ரூபாய் தான் நாம் கொடுக்கப் போகிறோம். இந்த நல்ல விசயம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதால் தான் இதில் கலந்துகொள்ள சம்மதித்தேன்" என்றார்.